வெள்ளி, 11 நவம்பர், 2022

கலங்காதே!

 தன் இனத்திற்காய் பிள்ளை உயிரை கொடுத்தான் 

தாய் அழுதா மூச்சிழந்து வீழ்ந்தா எழுந்தா அழுதா  

வீழ்ந்தா எழுந்தா அழுதா    

மாலை கட்டி கல்லறைக்கு அடிக்கடி போவா  

கல்லறையும் வீடோடு ஒன்றானது 

கல்லறையையும் காணாமலாக்கினார்கள் 

கல்லறை நிலமும் பறிபோயிற்று 

கலங்கிப்போனா தாய் 

தாயின் நினைவில் பிள்ளை வந்தான் 

ஏதோ சொன்னான் 

அது என்ன?


   

   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share