செவ்வாய், 1 நவம்பர், 2022

கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவை



கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையை 2005 ஆம் ஆண்டு நாங்கள் ஆரம்பித்தோம். எமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் மிகவும் பின்தங்கிய பகுதிகளை நோக்கி எமது வசதிற்கு இயன்றவரை முழுமையான மருத்துவசேவையை நகர்த்தினோம்.சிறுவர்களுக்கு முழுமையான நிர்ப்பீடனம் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதிலிருந்து நாற்பது வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சலரோகம், உயர் குருதியமுக்கம் பரிசோதனைகளை செய்தோம். அங்கு கண்டுபிடிக்கப்படும் மருத்துவ சுகாதார பிரச்சனைகளுக்கான  தீர்வுகளை உடனுக்குடன் ஒழுங்குபடுத்தினோம்.  மருத்துவ அணியோடு  நடமாடும் சத்திரசிகிச்சை கூடமும் வருமுன்காப்பு சேவையும் ஒன்றாகிற்று. 2008 ஆம் ஆண்டு இறுதிவரை 26 நடமாடும் மருத்துவ சேவையினை வழங்கினோம். ஒவ்வொரு சேவையின் முடிவிலும் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான மருத்துவ சுகாதார பிரச்சனை தீர்த்து / தொடர் நடவடிக்கையிற்கு சீராக ஒழுங்குபடுத்தி வெளியேறினோம்.  

 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share