வடமாகாணசபை தனது உபஅலுவலகத்தை மணலாறில் திறக்கவேண்டும். மணலாறின் பூர்வீகமக்கள் கடந்த 35 வருடங்களாய் அகதிகளாய் வாழ்கிறார்கள். மணலாறு இல்லாமல் வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை. தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் குற்றம் காணாமல் தமிழ்மக்களின் நீண்டகால நலனிற்காக உழைக்கவேண்டும். சிங்கள அரசாங்கம் தேவைக்கேற்ற முறையில் தமிழரையும் , அவர் வளங்களையும் கபடமாக பயன்படுத்தி வருகிறது. மணலாறு போன்று கிழக்கு மாகாணத்திலும் பல வளமிக்க ஊர்களை இழந்துவிட்டோம். அரசியல்வாதிகள் செயலில் இறங்கவேண்டும், நிலவைப்பார்த்து நாய் குரைப்பதால் பயனில்லை.
சனி, 7 ஏப்ரல், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக