திங்கள், 9 மே, 2016

நல்லிணக்கம் சாத்தியமா?

58,77,81,83--என
இனக்கலவரம் என்ற பெயரில்
நடந்த கொலை கொள்ளைகளுக்கு
யாருக்காவது தண்டனை வழங்கப்பட்டதா?
கொக்கட்டிச்சோலை படுகொலை உள்ளீடாய் நடத்தப்பட்ட
நூற்றுக்கும்  மேற்பட்ட திட்டமிட்ட படுகொலைகளுக்கும்
யாருக்காவது சிறை/தண்டனை/புனர்வாழ்வு?
இராணுவம்,கடல்,விமானப்படை போன்ற
பாதுகாப்புப்படைகளில்த்தான்
பெரும் குற்றவாளிகள்
சொகுசாக இருக்கிறார்கள்
சரணடைந்து காணாமல் போன
இளம்பரிதியின் இளைய மகளுக்கு
மூன்று வயது
நல்லிணக்கம் சாத்தியமா?  

முள்ளிவாய்க்காலில்  இனப்படுகொலை முற்று பெறவில்லை.இன்றும் கறையான் வடிவில் இனஅழிப்பு நன்கு திட்டமிட்டு நடக்கிறது. நடந்தது இனஅழிப்பு என்று ஒரு நாடும் வெளிப்படையாய் சொல்லவில்லை ஏனெனில் இனஅழிப்பு எனில் பாதிக்கப்பட்ட இனத்திற்கு சுதந்திரம் வழங்கவேண்டும். பலநாடுகள் தங்கள் நலனுக்காய் ஒரு பண்பாட்டு இனம் அழிந்துபோவதை மறைமுகமாயோ/நேரடியாயோ ஆதரிக்கின்றன.

போராடினாலும்
இல்லாவிட்டாலும்
இனம் அழியும்
போராடி வென்றால் மாத்திரமே
இனம் காக்கக்படும் 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share