என்னிடம் கர்வம் இல்லை
துளி கோபம் இல்லை
எள்ளளவும் பொறாமை இல்லை
மன்னித்துவிடு !
இல்லாததை கடன் கொடுக்கமுடியாது
திரும்பிவிடு !
வாழ்வு புத்தகத்தில் இறுதிப்பக்கங்களை
நம்பிக்கையொளியில்
புயல் ஓய்ந்த அமைதியோடு வாசிக்கிறேன்
இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்
என்னை விட்டுவிடு !
நாட்கள் மீதமிருந்தால் உனக்காகவும் யாசிப்பேன்
என் பாடலை என்னை பாடவிடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக