இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

ஆளும்வர்க்கம் வேறு என்ன செய்யும்?

 பழங்குடி மக்களுக்கு விடுதலை இல்லை 

ஒருகாலம் 

இன்றைய பலநாடுகள் அவர்களுடையது 

உலகமெலாம் அருகிப்போகிறார்கள் 

அவர்களிடமும் இசை நிறைந்த வாழ்விருக்கிறது 

எங்களை ஒத்த குருதியே அவர்களிடமும் ஓடுகிறது

இருந்துமென்ன ?

அவர் வேதனையின் பாடல் யாரும் கேட்பதில்லை  

உணர்வுகளை உணர ஆட்களில்லை 

அவர் வேரடியை /மொழியை யார் அறிவார் ?

புதுவருடம் வருகிறது - அதை 

உலகம் வர்ணமயமாய் கொண்டாடும் 

அவர் இதை அறியார்  

வாழ்விடங்களை தாண்டிவரா குரல் 

பல வித்தைகள் தெரிந்தும் விஞ்ஞானம் வளரவில்லை 

அவர்களை ஆராய்ச்சியிற்கு பயன்படுத்தும்  

நவீனத்தால் யாது செய்யமுடியும்?

 

 


 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share