பழங்குடி மக்களுக்கு விடுதலை இல்லை
ஒருகாலம்
இன்றைய பலநாடுகள் அவர்களுடையது
உலகமெலாம் அருகிப்போகிறார்கள்
அவர்களிடமும் இசை நிறைந்த வாழ்விருக்கிறது
எங்களை ஒத்த குருதியே அவர்களிடமும் ஓடுகிறது
இருந்துமென்ன ?
அவர் வேதனையின் பாடல் யாரும் கேட்பதில்லை
உணர்வுகளை உணர ஆட்களில்லை
அவர் வேரடியை /மொழியை யார் அறிவார் ?
புதுவருடம் வருகிறது - அதை
உலகம் வர்ணமயமாய் கொண்டாடும்
அவர் இதை அறியார்
வாழ்விடங்களை தாண்டிவரா குரல்
பல வித்தைகள் தெரிந்தும் விஞ்ஞானம் வளரவில்லை
அவர்களை ஆராய்ச்சியிற்கு பயன்படுத்தும்
நவீனத்தால் யாது செய்யமுடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக