வருடங்கள் வந்து மாறுகின்றன
ஏனோ புத்துணர்ச்சி இல்லை
ஒரு காலம் இருந்தது
இரு தினக்குறிப்புகள் கிடைக்கும்
நானோ கவிதைகள்தான் எழுதுவேன்
புதுவருட திட்டங்கள் மனதில் படிந்திருக்கும்
அதை செயல்களில்தான் எழுதுவேன்
அந்த தினக்குறிப்புகள் இப்போது கிடைப்பதில்லை
வருடமுடிவில் ஏக்கம் மட்டும் வந்துபோகிறது
(பாசக்)கடல் வற்றுவதில்லை
அவர் இயல்பும் அழகும்
எப்போதும் எனக்குள் மாறுவதில்லை
பார்வைக்கு அது ஒரு கடல்
உள்ளுக்குள் ஒரு இயங்கு உலகம்
புதுவருடம் இவர் நினைவுகளுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக