இருபது வருட சிறைவாழ்வு
இரு தடவை சிறைக்கலவரம்
மயிரிழையில் உயிர்தப்பி
உருமாறி விடுதலையாகி
ஊர் ஒழுங்கையை கண்டுபிடித்து
பலநாள் சேமித்த ஆசையுடன் வீடுவந்து
அம்மா ! என்று திகைப்பூட்ட
தாயிற்கு எதுவும் தெரியவில்லை
" மறதி நோய்"
சுற்றத்தில் சுகவிசாரிப்புகள் இல்லை
வேலிகள் மதில்களாயிற்று
ஒரே ஒரு நண்பன்
இங்கு குழந்தைகுட்டிகளோடு இருக்கிறான்
தெரிந்தும் தெரியாத ஊராயிற்று
தந்தையின் சாய்மனைக்கதிரைதான்
தஞ்சம் தருகிறது
விடிந்தும் விடியாத காலமிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக