புனிதர்களின் புதைகுழிகளுக்கு
மூன்று மூன்று தடவைகளாய்
மண் அள்ளி அள்ளி போட்ட
என் உள்ளங்கைகளை உற்றுப் பார்க்கிறேன்
எந்த பந்தமும் இதற்கு ஈடில்லை
எங்கும் செல்லலாம் வாழலாம்
உம் நினைவில்லாமல் எதுவுமில்லை
வயலும் கடலும் காடும் குளமும்
கலையும் பண்பாடும் எங்கள் தேசம்
செம்மொழித்தமிழும் தாய்த்திருநாடும்
ஒன்றோடொன்றான தமிழீழம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக