வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 16


1992 ஒரு நாள் இரவு , ஆனையிறவு இராணுவ முகாம் ஒன்றுடன் இணைந்த
காவல்ப்பகுதி , குறிப்பிட்ட காவல்நிலைகளை தாக்கி அழிப்பதற்காக அணிகள் உட்சென்றுவிட்டன , இரவு இரண்டு  மணியிருக்கும் , நுளம்பு கடித்துக்கொண்டிருந்தது,அடிக்கமுடியாது. அவ்வளவு அருகில் அத்தாக்குதலுக்கான களமருத்துவனாக பனையொன்றுக்குப்பின் முதுகு bag  உடன் படுத்துக்கிடந்தேன் . முன்னுக்கு சிறுபத்தைகள்.   அடுத்த பனையருகில் யாழ்மாவட்ட சிறப்புத்தளபதி தமிழ்செல்வன் பனையில் சாய்ந்தபடி குந்தியிருந்தார், பனைகளுக்கு  நடுவில் எனது தம்பி மலரவன் படுத்துக்கிடந்தான்.முதல் நாள் இரவு கிளாலிக்கரையில் களமருத்துவனாய் நின்றிருந்தேன், அதனால் நித்திரைவெறியோடும் , காதை சண்டையொலியின் எதிர்பார்ப்போடு வைத்திருந்தேன் .    சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்குப்பின் மலரவன் என் அருகில் ஊர்ந்துவந்தான். "தாக்குதல் நடக்காது, பிசகிவிட்டது . நீங்கள் வந்தவழியால் திரும்புங்கள்" ஆளை ஆள் அடையாளம் காணமுடியா இருள், அவன்  தமிழ்ச்செல்வனை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தான். இதுதான் என்தம்பியுடனான இறுதி சந்திப்புகளில் ஒன்று   என்று எனக்கு அப்போது தெரியவில்லை .   
      



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share