திங்கள், 12 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-20


 1992 களில் தலைவருக்கு என்று மருத்துவர் தேவை என்று உணரப்பட்டிருக்கவேண்டும். அப்போது சொர்ணம்தான் தலைவரின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தார். நான்தான் தலைவருக்கு உரிய மருத்துவராக நியமிக்கப்பட்டேன். அப்போது நான் மருதுவக்கல்வியைக்கூட முடித்திருக்கவில்லை. பின் சிறுத்தைப்படையணி  , கரும்புலிகளுக்கு உரிய மருத்துவராய் தலைவரால் நியமிக்கப்பட்டேன் . நான் வேறுகடமைகளில் இருக்கின்ற காலங்களில் தலைவருக்கு அவசியதேவையெனில்  இன்னுமொரு மூத்த மருத்துவரும் தலைவரை பார்த்து வந்திருக்கிறார்.
தலைவரின் குடும்பத்தின் மருத்துவராக பத்மலோஜினி அக்கா இருந்தார். நான் தலைவரின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தமையால் தலைவருடன் இடைக்கிடை அவருடைய குடும்பத்தையும் சந்திக்கவேண்டியிருந்தது.
 
 பத்மலோஜினி அக்கா திருமணம் முடித்த (1999 ) பின்பு தலைவரின் குடும்பத்திற்குமான மருத்துவராகவும் நியமிக்கப்பட்டேன். சமாதானகாலத்தில் தலைவரின் தாய்,தந்தையரும் தலைவர் குடும்பம்பத்தோடு இணைந்தனர். இறுதிவரை என்பணி தொடர்ந்தது.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share