திங்கள், 19 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்-25


வளலாய் இராணுவ தொடர்காவல்நிலைகள் (1992 ) மீதான தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்னும் இந்த தாக்குதலுக்கு சென்று திரும்பினோம் .  ஏன் திரும்பினோம் என்பது தெரியவில்லை. என்ன காரணத்திற்காக நிறுத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. அன்று காலை எதிர்பாராத வகையில் நானும் தம்பியும் எங்கள் வீட்டில் சந்தித்துக்கொண்டோம். இருவருமே வீட்டில் இருந்து வேளைக்கு செல்ல வேண்டும் என்பதிலேயே கரிசனையாக இருந்தோம். அம்மா புட்டும் கத்தரிக்காய் கறியுடன் முட்டை ஒன்றை பொரித்து பாதி பாதியாய் பிரித்து போட்டுவிட்டார். சாப்பிடும்போது கதைத்ததுதான் பிரிந்துவிட்டோம்.  பின்னேரம் அச்சுவேலியில் சந்தித்தோம் வெறும் சிரிப்புடன் பிரிந்தோம். இருவரும் போராளிகளாய் இருந்தும் ஆளுக்கு ஆள் இயக்க இரகசியங்களை மறைப்போம். 
ஆனையிறவில் காவல்நிலைகள் மீதான தாக்குதலுக்குச் சென்றும் திரும்பியிருந்தோம்.  இரண்டு தாக்குதல்களும் நடைபெறாததால் எது முதல் எது பின்பு என்பதை என்னால் தற்போது ஞாபகப்படுத்தமுடியவில்லை. அந்தக்காலங்களில் கிளாலி ஊடான மக்கள் பயணங்களுக்கு எமது கடல்படை  பாதுகாப்புக்கொடுக்கும் .  நானும் மாறி மாறி களமருத்துவத்திற்கு செல்வேன் . எனது அன்றைய நாட்கள் களைப்படைந்த நாட்களே.
  தம்பி வீரச்சாவு அடைந்து சிலகாலத்திற்குப்பின் பைப் (பாவரசன்) அண்ணை கதைக்கும்போது சொன்னார் " நான் இயக்கத்தில் டாம் என்ற விளையாட்டில் தோற்றுப்போனது இவனிடம்தான்"  .       
தம்பி மலரவன் டாம், செஸ் போன்றவிளையாட்டுக்களிலும் புலியாகவே இருந்தான். 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share