திங்கள், 5 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 17


நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். விவசாயமே எமது பூர்வீகம். என் தந்தை வழி பேரன் ஒரு பெரு விவசாயி, எனது தந்தையாரும் 77  ஆம் ஆண்டு கலவரத்துடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருவருடங்கள் முழுநேர விவாசாயியாக இருந்தார்.  எமது சிறுபராயத்தில் பாடசாலை நேரம் போக மிகுதி நேரம் தோட்டத்தில் புல்பிடுங்குதல், வயல் விதைப்பு , ஆடு மாடு வளர்த்தலோடு போகிற்று. சங்கீதமோ மிருதங்கமோ இசைகளோ நீச்சலோ பயின்றதில்லை. ஆனால் நேர்மையாக வளர்க்கப்பட்டோம். எம் இனவிடுதலைக்கு அழைப்பாணை வரும்போது வீட்டில் நால்வரில் மூவர் போராளியானோம். அநேக சாதாரண குடும்பங்கள் அந்நேரம் அனுபவித்த மனவேதனையை என் பெற்றோர் அன்றிலிருந்து இன்று வரை அனுபவிக்கிறார். என் பெற்றோரின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது . என் பெற்றோரை காணாமல் கண்மூடப்போகிறேன் எனும் கவலை தினமும் என்னைக் கொல்கிறது.  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share