புதன், 14 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 21


நான் சமாதானகாலத்தில் மலேரியா சம்மந்தமான செயலமர்வுக்கு பதுளைக்கு சென்றுவந்தேன். அப்போது மலையகத்தை மேலோட்டமாக அலசிவந்தேன்  . என் சிறுபராயத்தில் மலையகத்தில் வாழ்ந்ததால் மலையகவாழ்வை நன்கு அறிந்திருந்தேன். சுமார் 25 -30  வருடங்களுக்குப்பின் அவர்களது வாழ்விடங்கள் , வாழ்வில் எந்த முன்னேற்றங்களையும் காணமுடியவில்லை. இது எனது மனதை குடைந்துகொண்டிருந்தது. என் பிரயாணத்திற்குப்பின் தலைவரை சந்திற்கும்போது சம்பாஷணையில்  இந்தவிடயத்தை இணைத்தேன். தலைவர் மிகவும் கரிசனையுடன் நீண்டநேரம் உரையாடினார். அந்தமக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை நாங்கள் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் வெளிநாட்டில் இருந்தார். தமிழ்ச்செல்வன் வந்தபின் மீண்டும் உரையாடுவோம், ஏதாவது யோசனைகள் இருப்பின் ஞாக்கப்படுத்திவைத்திருங்கள் என்றார். பின் சரியான தருணங்கள் அமையவில்லை. நான் சிலவிடயங்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்.        


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share