மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவன் என்ற கதையை சிறுவயதில் கேட்டிருக்கிறேன் ( ஒரு இனத்தை அப்படி சொல்வது முறையல்ல- தவறு ) . களத்தில் புலிகளின் உடல்களை இராணுவம் கைப்பற்றினால் உடல்கள் எந்தநிலையில் இருந்தாலும் புலிகள் ICRC ற்கூடாக பெற்றுக்கொள்வார்கள் ஆனால் இராணுவம் நல்லநிலையில் உள்ள உடல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் , சிலநேரங்களில் அதையும் பெறமறுத்துவிடும். புலிகள் பெறும் உடல்கள் சிலநேரங்களில் அடையாளம் காண்பதே கடினமாகயிருக்கும். இராணுவநடவடிக்கையால் துண்டி முரசுமோட்டையில் இயங்கியபோது (2008 பிற்பகுதி) முப்பதிற்கு மேலான உடல்கள் கிடைத்திருந்தது. எல்லா உடல்களையும் நான் பரிசோதித்தேன். எல்லா உடல்களிலும் பாரிய காயங்கள் இருந்தன. ஏழு உடல்களில் பாரிய காயங்களுடன் , உயிருள்ளபோதே கூரிய ஆயுதத்தால் கிழித்த காயங்கள் கழுத்துப்பகுதியில் இருந்தன . ஏழுகாயங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருந்தது. வழமைபோல் அவ்வறிக்கையையும் மேலிடத்திற்கு கொடுத்திருந்தேன்.
வெள்ளி, 9 பிப்ரவரி, 2018
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக