2004 ஆம் ஆண்டு அது ஒரு முக்கிய விசாரணை . போராளிகளுக்கான பொதுப்பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவில் நடேசன் அண்ணை பொறுப்பாகவும் நான் ஒரு உறுப்பினனாகவும் இருந்தேன். பெண்கள் சம்மந்தமான பிரச்சனை வரும்போது பெண்போராளி ஒருவர் உறுப்பினராக இருந்தார். இந்த விசாரணைக்கு பொட்டம்மானும் நானும் நியமிக்கப்பட்டோம். விசாரணை முடிவில் இருவரும் தனித்தனி அறிக்கைகளை கொடுத்தோம். இரு அறிக்கைகளும் ஒன்றாக இருக்கவில்லை. தலைவர் எனது அறிக்கையை (மருத்துவ காரணங்களுக்காக) தேர்ந்தெடுத்தார். தலைவரின் தளபதிகளுக்கான சந்திப்புக்கு தலைவர் கூட்டிச்சென்றார்.
அந்த சந்திப்பில் பலவிடயங்களை தளபதிகளுக்கு விளங்கப்படுத்த வேண்டியிருந்தது. பொட்டம்மானும் விதுசாவுமே அதிக கேள்விகள் கேட்டனர். இறுதியில் எனது பக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.எனது அறிக்கையின்படி தொடர் நடவடிக்கை எடுக்க தலைவர் முடிபு கூறினார். சந்திப்புமுடிய தளபதி ஜெயமும் தீபனும் எனக்கு கைலாகு தந்தனர். சந்திப்பின்போது நான் தலைவருக்கு சற்றுத்தொலைவாக இரட்ணம் மாஸ்டருக்கு அருகில் இருந்தேன். தலைவர் என்னை அழைத்து தனக்கு இடதுபக்க இருக்கையில் அமர்த்தினார். தலைவருக்கு வலதுபுறத்தில் பொட்டம்மான் இருந்தார். விசாரணை சம்மந்தமான கலந்துரையாடல் முடிய வேறுவிடங்கள் கலந்துரையாடவேண்டியிருந்தது. நான் எழுந்தேன் வெளியில் போய் இருக்க, தலைவர் " பிரச்சனையில்லை நீங்க இருங்கோ என்றார்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக