போர்ச்சூழலில் சிறுவர்களுக்காய் ஓரளவு திருப்தியாய் பணிசெய்ததாய் உணர்கிறேன். சிறுவர் பட்டினிச்சாவு தவிர்ப்புத்திட்டத்தில் முக்கிய பணி ஆற்றியிருக்கிறேன். பாடசாலை விலகிய பிள்ளைகளை மீள பாடசாலைகளுக்கு கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். உலக உணவுத்திட்டத்தின் தேவைப்பகுப்பாய்வு நிபுணரான பணியாற்றி அத்திட்டத்தை வன்னிக்கு கொண்டுவர உதவியிருக்கிறேன். Children Development Council (NGO)இன் ஆலோசகராக இருந்து முன்பள்ளி பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உழைத்திருக்கிறேன். வருமுன்காப்புப்பணியில் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியபணியாற்றியிருக்கிறேன். நோயுற்ற , காயமுற்ற சிறுவர்களின் சிகிச்சை அளித்தலிலும் பங்குபற்றியிருக்கிறேன்.
சனி, 17 பிப்ரவரி, 2018
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக