வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அன்றும் இன்றும்


அன்றும் இன்றும் 

எத்தனை தடவைகள் 
மயிரிழையில் உயிர்தப்பினேன் 
எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை 
கிளைமர் பாதைகளில் எமது பயணம் 
வாழும் ஒவ்வொரு நாட்களும் 
போனஸ் நாட்கள் - இருந்தும் 
மகிழ்ச்சிட்கு குறைவில்லை 
கடமைச்சுமையால் 
உடல் களைத்தாலும்
உள்ளம் இளமையாய் இருந்தது 
இழந்தவரின் கனவையும் 
சுமந்து வாழ்கையில் 
எதையும் தாங்கிற்று மனம் 

இன்று 
நடைப்பிமாயிற்று  வாழ்வு 

-நிரோன்-



Share/Save/Bookmark

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

சிறுவர் ஆக்கங்கள்


1,


பூனையார் பூனையார் 
எலி பிடிக்கும் பூனையார் 
பதுங்கிப்பதுங்கி 
எலி பிடிக்கும் பூனையார் 



Share/Save/Bookmark

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சுஜோவின் ஹைக்கூ /விடுகதைகள் -03



1,
ஆசைமனதுக்கு 
தொற்றும் நோய் 
ஊழல் 

2,
ஏன்?எதற்குபுரியாமல்
மனிதரால் மனிதர் சாகிறார்கள்  
பயங்கரவாதம் 

3,
சினிமா நடிகர்களின் 
சிரிப்பு 
அரசியல் வாக்குறுதி 

4,
மனிதன் 
எரிக்கும் காற்று 
பெருமூச்சு 

5,
நெருப்பு,காற்று இல்லாமல் 
எரியாது கற்பூரம்               
பெற்றோர்  உறவுகள் நான் 

6,
அலைகளுக்கிடையில் 
அடைக்கலம் தரும் பாசக்கடல் 
அம்மா  

7,
வானத்திற்கும் நிலத்திற்கும் ஓடும் 
தொட்டால் சுருங்கும் புகைவண்டி 
மழை 


8,
சதா விழித்திருக்கும் 
கண் 
காவலரண் 

9,
மனதில் வடியும் 
ஊனம் 
பொறாமை 

10,
மனம் 
பொங்கும் பொங்கல் 
மகிழ்ச்சி 

11,
மனிதனிடமுள்ள 
நாகாஸ்திரம் 
மன்னிப்பு 

12,
பாட்டி சுட்ட வடை 
காகம் கொண்டு போனது 
கட்சி தாவினார் எம் பி 


13,
பூவோடு 
சேர்ந்து நாரும் மணத்தது
கல்லறைக்கற்கள்       
14,
முளைவிட 
இன்னொரு உலகம் 
மீசை 

15,
சிவந்த உப்பு மழை 
ஏந்திய தாய் 
முள்ளிவாய்க்கால் 

16,
வரவேற்கவும்,
வழியனுப்பவும் பூக்கள் 
அறிவிப்பு:வாடிடும் வாழ்க்கை  

17,
கட்டுப்படுத்தமுடியாதது 
ஆணையும் பெண்ணாய் மாற்றும்
வதந்தி  

18,
இரைதேடி குருவிகள் போக 
குஞ்சுடன் குருவிக்கூடுகள் போயின 
சுனாமி 

19,
பழைய புதுமை மொழி-யாரும் 
புரியாமலே இரசிக்கலாம் 
குழந்தை மொழி 

20,
எழுத்தில் உள்ளது 
நடைமுறையில் வராது 
நல்லிணக்க ஆணைக்குழு 


21,
மாடிகள் பேசப்படுகின்றன 
அத்திவாரங்கள் ?
பூக்களும் வேர்களும் 

22,
ஏழைகளின் 
பாடப்புத்தகம் 
வறுமை 

23,
மயிர்க்கொட்டிகள் 
வண்ணாத்திப்பூச்சிகளாவது 
அடக்குமுறையும் விடுதலையும் 

24,
அம்மா பசிக்குது 
கையில் உணவுமில்லை,காசுமில்லை 
நட்டாறு

25,
கண் தெரியாதவன் 
பெரிதாய் எழுத்துக்களை எழுதுவான் 
நியுட்டனின் மூன்றாம் விதி 



Share/Save/Bookmark
Bookmark and Share