வெள்ளி, 31 மார்ச், 2023

"என் தனித்துவத்தை மதி "

  உலகம் 

என்னை பிழிந்து எடுக்கிறது 

எங்கு தொடங்கியது பிரிவினை ? 

"என் தனித்துவத்தை மதி "

அங்குதான் தொடங்கியது   




Share/Save/Bookmark

வியாழன், 30 மார்ச், 2023

ஏதோ நம்பிக்கையில்

இலைகள் 

மரங்களில் பசுமையை விரித்திருந்தன

இன்னுமொருநாள் 

மஞ்சளை பூசி மகிழ்ந்திருந்தன

பிரிதொருநாள் சருகாகின 

எதுவந்தபோதும்

அசையா மரங்கள் மீண்டும் துளிர்த்தன

ஏதோ நம்பிக்கையில்   

 



Share/Save/Bookmark

ஞாயிறு, 26 மார்ச், 2023

இன மத மொழிகடந்து எப்போதும் என் சீவியம்

 இன மத மொழிகடந்து 

இப்போதல்ல 

எப்போதும் என் சீவியம்  


அடக்குமுறை 

எவருக்காகினும் எவ்வடிவிலாயினும் 

என்கைகள் அவர் தோளணைக்கும்   

என் இதயம் அவருக்காய் துடிக்கும் 


வலி அறிந்தவன் 

எவரின் வலியும் அறிவான் 

வழிதிறக்க குரலாவது தருவான்    




Share/Save/Bookmark

சனி, 18 மார்ச், 2023

திடீரென அப்பா படமாகிப்போனார்

 கைபிடித்து நடக்கப்பழக்கி

என் காலில் நிற்கவைத்தார் 

அப்பாவுக்குள்ளால் 

உலகை பார்த்தோம் 

திடீரென  

அப்பா படமாகிப்போனார் 

எங்கும் தேடி எனக்குள் தேடுகிறேன் 

முன்னும் பின்னுமாய் நகர்கிறது காலம் 



Share/Save/Bookmark

மழை நின்ற பின்பும்--

 சூரியன் இல்லாத இந்த இரவிலும் 

வியர்த்துக்கொண்டு இருக்கிறது 

மழை நின்ற பின்பும் 

ஒழுகிக்கொண்டிருக்கிறது ஓலைக்குடிசை 

உன்னை இழந்த பின்பும் 

கூடாரமிடுகின்றன உன்நினைவுகள் 

தந்தை இல்லாதபோதும் 

அவர் உருவில் மகன்     



Share/Save/Bookmark

செவ்வாய், 14 மார்ச், 2023

யாரோ சொல்லத்தவறிய கவிதை 

இருளினுள் ஒளியால் எழுதப்படுகிறது  

பறவைகள் கூடடையும்போது - இது 

குஞ்சுகளின் குதூகலம்போல தெரிகிறது  



Share/Save/Bookmark

சனி, 4 மார்ச், 2023

இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்

என்னிடம் கர்வம் இல்லை 

துளி கோபம் இல்லை 

எள்ளளவும் பொறாமை இல்லை 

மன்னித்துவிடு !

இல்லாததை கடன் கொடுக்கமுடியாது 

திரும்பிவிடு !

வாழ்வு புத்தகத்தில் இறுதிப்பக்கங்களை 

நம்பிக்கையொளியில்  

புயல் ஓய்ந்த அமைதியோடு வாசிக்கிறேன்  

இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்

என்னை விட்டுவிடு !  

நாட்கள் மீதமிருந்தால் உனக்காகவும் யாசிப்பேன்

என் பாடலை என்னை பாடவிடு!  



Share/Save/Bookmark

யார் பேச்சும் கேட்கமாட்டாய் !

 மனிதனின் வாழ்வுமட்டுமல்ல 

விலங்கின் வாழ்வும்  குறுகியதுதான்

இருந்துமென்ன 

இருக்குமட்டும் புரிவதில்லையவர்  

பூமியிருக்கிறது 

எம்பரம்பரைகளின் கதைகளை அறிந்த  

பூமியிருக்கிறது

சாட்சியாக வானமிருக்கிறது 

மூச்சாகும் காற்று இருக்கிறது 

இருந்துமென்ன

பேச்சிருக்கும்வரை 

உனது ஆட்சிதான் 

யார் பேச்சும் கேட்கமாட்டாய் ! 



Share/Save/Bookmark

வியாழன், 2 மார்ச், 2023

 கவிதை என்று எழுதிக்கொண்டிருந்தேன் 
நான் அறியாமலே 
அது பாதையாய் நீண்டிருக்கிறது 
திக்கற்று 
எங்கோ வந்து நிற்கிறேன்  
பேனா,தாள்களற்று கணினியாகி 
எழுதஎழுத அம்மம்மா வாசிப்பா 
எதை எழுதினாலும் "அருமை " என்பா 
எழுதியபின் பிள்ளை வாசிக்கிறாள் 
ம் எதுவும் புரியவில்லை என்கிறாள்    



Share/Save/Bookmark
Bookmark and Share