உலகம்
என்னை பிழிந்து எடுக்கிறது
எங்கு தொடங்கியது பிரிவினை ?
"என் தனித்துவத்தை மதி "
அங்குதான் தொடங்கியது
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
உலகம்
என்னை பிழிந்து எடுக்கிறது
எங்கு தொடங்கியது பிரிவினை ?
"என் தனித்துவத்தை மதி "
அங்குதான் தொடங்கியது
"என் தனித்துவத்தை மதி "
இலைகள்
மரங்களில் பசுமையை விரித்திருந்தன
இன்னுமொருநாள்
மஞ்சளை பூசி மகிழ்ந்திருந்தன
பிரிதொருநாள் சருகாகின
எதுவந்தபோதும்
அசையா மரங்கள் மீண்டும் துளிர்த்தன
ஏதோ நம்பிக்கையில்
ஏதோ நம்பிக்கையில்
இன மத மொழிகடந்து
இப்போதல்ல
எப்போதும் என் சீவியம்
அடக்குமுறை
எவருக்காகினும் எவ்வடிவிலாயினும்
என்கைகள் அவர் தோளணைக்கும்
என் இதயம் அவருக்காய் துடிக்கும்
வலி அறிந்தவன்
எவரின் வலியும் அறிவான்
வழிதிறக்க குரலாவது தருவான்
இன மத மொழிகடந்து எப்போதும் என் சீவியம்
கைபிடித்து நடக்கப்பழக்கி
என் காலில் நிற்கவைத்தார்
அப்பாவுக்குள்ளால்
உலகை பார்த்தோம்
திடீரென
அப்பா படமாகிப்போனார்
எங்கும் தேடி எனக்குள் தேடுகிறேன்
முன்னும் பின்னுமாய் நகர்கிறது காலம்
திடீரென அப்பா படமாகிப்போனார்
சூரியன் இல்லாத இந்த இரவிலும்
வியர்த்துக்கொண்டு இருக்கிறது
மழை நின்ற பின்பும்
ஒழுகிக்கொண்டிருக்கிறது ஓலைக்குடிசை
உன்னை இழந்த பின்பும்
கூடாரமிடுகின்றன உன்நினைவுகள்
தந்தை இல்லாதபோதும்
அவர் உருவில் மகன்
மழை நின்ற பின்பும்--
என்னிடம் கர்வம் இல்லை
துளி கோபம் இல்லை
எள்ளளவும் பொறாமை இல்லை
மன்னித்துவிடு !
இல்லாததை கடன் கொடுக்கமுடியாது
திரும்பிவிடு !
வாழ்வு புத்தகத்தில் இறுதிப்பக்கங்களை
நம்பிக்கையொளியில்
புயல் ஓய்ந்த அமைதியோடு வாசிக்கிறேன்
இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்
என்னை விட்டுவிடு !
நாட்கள் மீதமிருந்தால் உனக்காகவும் யாசிப்பேன்
என் பாடலை என்னை பாடவிடு!
இதுவரை வாசித்ததை அசைபோடுகிறேன்
மனிதனின் வாழ்வுமட்டுமல்ல
விலங்கின் வாழ்வும் குறுகியதுதான்
இருந்துமென்ன
இருக்குமட்டும் புரிவதில்லையவர்
பூமியிருக்கிறது
எம்பரம்பரைகளின் கதைகளை அறிந்த
பூமியிருக்கிறது
சாட்சியாக வானமிருக்கிறது
மூச்சாகும் காற்று இருக்கிறது
இருந்துமென்ன
பேச்சிருக்கும்வரை
உனது ஆட்சிதான்
யார் பேச்சும் கேட்கமாட்டாய் !
யார் பேச்சும் கேட்கமாட்டாய் !