கார்த்திகை மாதமெனில் பல நினைவுகள் வரிசையில் வரும். 27/11/2007அன்று மாவீரர் நாள் மாணவ முதலுதவியாளர்கள் முதலுதவி கடமைக்காக , மதியப்பொழுதில் ஐயன்கன்குளம் திலீபன் மருத்துவ மனையில் இருந்து ஆலங்குளம் துயுலும் இல்லத்திற்கு நோயாளர் காவும் வண்டியில்(Ambulance) சென்றனர் . ஸ்ரீலங்கா இராணுவத்தின் கிளைமோர்த்தாக்குதலில் பதினொரு பாடசாலை மாணவப்பிஞ்சுகள் உயிர் துறந்தன.ஐயன்கன்குளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.நான் குறுகிய காலம் திலீபன் மருத்துவமனைகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.அப்போது தமீழீழ சுகாதாரசேவைகளின் பத்தாயிரம் முதலுதவியாளர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் திலீபன் மருத்துவமனைகளிலும் முதலுதவிவகுப்புகளை ஆரம்பித்துவைத்தேன்.
கடவுளே!உயிர்களை காக்கவே முதலுதவியாளர்களை உருவாக்கினோம் ,இழப்பதற்கல்ல.
கடவுளே!உயிர்களை காக்கவே முதலுதவியாளர்களை உருவாக்கினோம் ,இழப்பதற்கல்ல.