சனி, 27 ஜூன், 2015

வருமுன் பாதுகாப்புப்பணி

மக்களை சுகாதார அறியுடையவராய் மாற்ற பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். மலேரியா தடைபகுதியின் பூச்சியியல் பிரிவு, தமீழீழ சுகாதாரசேவைகளின் பற்சிகிச்சைப்பிரிவு, தொற்று நோய்த்தடுப்பு பிரிவு களுக்கூடாக ஆயிரத்திற்கு மேற்பட்ட exhibition களை வன்னியில் போர்ச்சூழலில் நடாத்தியிருந்தாலும் கிளிநொச்சி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கூடாக நடாத்தப்பட்ட நான்கு exhibition களும் பெரியளவில் நடாத்தப்பட்டன. 1999 ஆம் ஆண்டு அக்கராயன் மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட exhibition இணை சுமார் பத்தாயிரம் மக்கள் பார்வையிட்டனர். அக்கராயனிலும் வட்டக்கச்சியிலும் நடாத்தப்பட்ட exhibition களில் தமீழீழ மருத்துவக்கல்லூரியினரும் பங்கு பற்றியிருந்ததால் குறிப்பாக உயர்தரவகுப்பு விஞ்ஞான மாணவர்கள் மிகுந்த பயனடைந்தனர். exhibition களில் கலைநிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாய் நடாத்தினோம். "குறைந்த விலையில் சத்துள்ள உணவு தயாரிப்பு " சத்துக்கள் பணவிரய விபரங்களுடன் உணவகத்தையும் வட்டக்கச்சியில் நடாத்தியிருந்தோம்.  மிதிவெடி, விபத்து பாதுகாப்பு, முதலுதவி, nutrition , தாய் சேய் பராமரிப்பு ,தொற்று நோய் தடுப்பு என பல விடயங்கள் விலாவாரியாக மக்களிடம் எடுத்துச்செல்லப்பட்டது. கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவை யுடனும் exhibition களை பாதுகாப்பு கேள்விக்குறியான பிரதேசங்களில் ( நெடுங்கேணி, தட்சணா மருதமடு, -----------)நடாத்தியிருந்தோம்.  

 எமது வருமுன் பாதுகாப்புப்பணியில் exhibition களையும் ஒருவடிவமாக பயன்படுத்தினோம். 1990 களின் பிற்பகுதியில் இலங்கையின்  தொற்று நோய்கூடியபிரதேசமாய் (குறிப்பாக மலேரியா,typhoid fever ) எமது பகுதி இருந்தது. 2000 களின் ஆரம்ப காலங்களில் இலங்கையின்  தொற்று நோய்குறைந்த பிரதேசமாய்  எமது பகுதி மாறிற்று.


Share/Save/Bookmark

செவ்வாய், 16 ஜூன், 2015

மீண்டது அந்தநாள் ஞாபகம்

1990
கோட்டையில் சண்டை
யாழ் மருத்துவமனை
மானிப்பாயிற்கு இடமாற்றம்
சுமார் நாற்பது  படுக்கை நோயாளிகளுடன்
நடு இரவில் மாவடி,வட்டுக்கோட்டையிற்கு
தனியொருவனாய் போனேன்
ஒரு கைவிடப்பட்ட வீட்டில்
கிணற்றுக்கு வாளி இல்லை
எதுவுமே இல்லை
பகுதிப்பொறுப்பாளரின்  தொடர்புவர
ஒரு நாள் ஆயிற்று
பிஸ்கட் உணவாயிற்று
பாடசாலை சிறு மேசை உதவியுடன்
வாழை இலையில் toilet எடுத்தேன்
படிப்படியாய் உதவிகள் கிடைத்தது
வசதிகள் பெருகின
பின் அந்தப்பகுதியிலேயே
நான்கு மருத்துவவீடுகள் வைத்திருந்தேன்
இருபத்தி ஐந்து வருடங்கள் கடக்கின்றன
இன்று
அன்று உதவி செய்த நண்பனின் தொடர்பு
மீண்டது அந்தநாள் ஞாபகம்      


Share/Save/Bookmark

புதன், 10 ஜூன், 2015

எலும்பில்லாதவரின் வேஷம், விஷம் கலந்த பாசம்

கையில்லை,காலில்லை,
இடுப்புக்குகீழ் வழங்கவில்லை
மனநிலை சரியில்லை
முன்னாள் போராளிகள்தானே!
உயிரை பணயம் வைத்துவாழ்ந்தவர்தானே
இதையும் தாங்கட்டும் !
உயிர்போக (முன் )
தெள்ளு கழன்று போகிறது
யதார்த்தம்தான்

எலும்பில்லாதவரின் வேஷம்

விஷம் கலந்த பாசம்


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஜூன், 2015

சில கேள்விகளுக்கு நான் விடை அளித்ததில்லை.

சில கேள்விகளுக்கு நான் விடை அளித்ததில்லை.
வன்னியில் இருந்து எப்படி மலேரியாவை  பிரித்தீர்கள்? பலர் கேட்டிருக்கிறார்கள் என்னிடம் .

எதுவுமே ஒரு நாளில் நடந்து முடிவதில்லை.  ஒரு புத்தகம் எழுதக்கூடிய வேலைத்திட்டங்கள் எங்கள் உழைப்பில் இருந்தது. இந்த அனுபவங்கள் பின்னாளில் சிக்குன்குன்யா,டெங்கு நோய்களில் இருந்தும் எம்மக்களை காக்க உதவிற்று. ஆளணிப்பற்றாக்குறை,பொருளாதாரத்தடை, மருந்துத்தடைகளுக்கூடும் ஸ்ரீ லங்காவைவிட பல படி உயரத்தில் எமது வருமுன்காப்பு பணி இருந்தது.இதனால் இருபகுதிகளும் தொற்று நோய்த்தடுப்பிலும் வேறுபட்டிருந்தன. வன்னிமண் வீரத்தை மட்டுமல்ல மக்கள் பணியையும் மறக்காது.
முழுமையான போர்ச்சூழலில் ஒரு தோளில் விடுதலைப்போராட்ட சுமையையும் மறு தோளில் மக்கள் பணியையும் இறுதிப்போர்க்கணம்வரை சுமந்தோம். 


Share/Save/Bookmark
Bookmark and Share