ஞாயிறு, 7 ஜூன், 2015

சில கேள்விகளுக்கு நான் விடை அளித்ததில்லை.

சில கேள்விகளுக்கு நான் விடை அளித்ததில்லை.
வன்னியில் இருந்து எப்படி மலேரியாவை  பிரித்தீர்கள்? பலர் கேட்டிருக்கிறார்கள் என்னிடம் .

எதுவுமே ஒரு நாளில் நடந்து முடிவதில்லை.  ஒரு புத்தகம் எழுதக்கூடிய வேலைத்திட்டங்கள் எங்கள் உழைப்பில் இருந்தது. இந்த அனுபவங்கள் பின்னாளில் சிக்குன்குன்யா,டெங்கு நோய்களில் இருந்தும் எம்மக்களை காக்க உதவிற்று. ஆளணிப்பற்றாக்குறை,பொருளாதாரத்தடை, மருந்துத்தடைகளுக்கூடும் ஸ்ரீ லங்காவைவிட பல படி உயரத்தில் எமது வருமுன்காப்பு பணி இருந்தது.இதனால் இருபகுதிகளும் தொற்று நோய்த்தடுப்பிலும் வேறுபட்டிருந்தன. வன்னிமண் வீரத்தை மட்டுமல்ல மக்கள் பணியையும் மறக்காது.
முழுமையான போர்ச்சூழலில் ஒரு தோளில் விடுதலைப்போராட்ட சுமையையும் மறு தோளில் மக்கள் பணியையும் இறுதிப்போர்க்கணம்வரை சுமந்தோம். 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share