புலம்பெயர்ந்தேன்
யாவும் காவி புலம்பெயர்ந்தேன்
மனம் குடைகிறது
ஏதோ ஒன்று விடுபட்டதாய்
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லாதவனாய்
என்னதான் விட்டுவந்தேன்
எனை வளர்த்த தாய்மண்ணே !
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
புலம்பெயர்ந்தேன்
யாவும் காவி புலம்பெயர்ந்தேன்
மனம் குடைகிறது
ஏதோ ஒன்று விடுபட்டதாய்
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லாதவனாய்
என்னதான் விட்டுவந்தேன்
எனை வளர்த்த தாய்மண்ணே !
என்ன விட்டுவந்தேன் தாய்மண்ணே !
அதிகாலை
பனி கீழிறங்கிக்கொண்டிருந்தது
வீட்டினுள் குளிர் புகுந்து தட்டியெழுப்பியது
யன்னலருகில் நான்
கலங்கி பறைந்தது சுற்றம்
வெளிராய் உறைந்த வீதிகள்
விதி தப்பவைத்தது விடுமுறைநாள்
கம்பளியையும் தாண்டி ஈரல் நடுங்கிற்று
விறைத்து பார்த்துக்கொண்டிருந்தேன்
மெதுமெதுவாய் வந்தான் ஆதவன்
சாகசங்கள் புரிந்தான்
வெள்ளம்புவிட்டு என்னையும் வீழ்த்தினான்
என்னையறியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்
குளிர் கால ஆதவன்
ஆகா என்ன சுகம்
நேரம் போக போக சுட்டெரித்தான்
யன்னலை மூடுகிறேன்
காலையொன்று காணாமல் போகிறது
விடுமுறைநாளில் பனிக்கால காலை
என் இனம் சக இனத்தால்
நசுக்கப்படுவதை கேட்டு வளர்ந்தேன்
சுதந்திர தீர்மானத்திற்கு தள்ளப்பட
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து
விடுதலைக்கூட்டணியை ஆதரித்தேன்
தேர்தலில் வென்றும் எதுவும் இல்லை
அரசியல் ஜனநாயத்தில் நம்பிக்கையிழந்தேன்
அமைச்சரே நூலகத்தை எரிக்க
இனஅழிப்பை தடுக்க வேறுவழியில்லை
சொந்த இலட்சியம் துறந்தேன்
நண்பன் அகிம்சையில் பிரிய
அதிலும் நம்பிக்கை போயிற்று
ஆயுதமே வழியென்றாயிற்று
இனம் சுதந்திரம் பெறும் நேரம்
உலகம் எங்களை அழித்திற்று