புதன், 22 பிப்ரவரி, 2012

சுதந்திரத்திற்கு ஈடு,இணையாய் இவ்வுலகில் ஏதும் இல்லை.

1977 ஆம் ஆண்டுத்தேர்தலில் தமிழீழமே தீர்வு என்று தமிழ்
மக்களால் ஜனநாயகமுறையில் உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது.
யாருமே ஜனநாயகத்தை பொருட்படுத்தவோ/  மதிக்கவோ இல்லை.
தீர்வும் கிடைக்கவில்லை மாறாய் அப்பாவிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து
விடப்பட்டது.
ஆயுத போராட்டம் தவிர்க்கமுடியாமல் போயிற்று.
                                     மக்களுக்காக மக்களுக்குள் இருந்து போராளிகள்
தோன்றினர்.ஏற்கனவே சிறு இனமாக இருந்த தமிழர்களுக்குள்ளும்
சிறு தொகையினரே முன்வந்து ஆயுத பயிற்சி பெற்று போராளியாயினர்.
இருந்தும் போராட்டம் குறிப்பிடக்கூடிய வெற்றிகளை அவர்
தியாகங்களால் பெற்றது.மிகச் சிறிய அளவு மக்களும் ஆயுத
பயிற்சி பெற்று தமது தேசக்கடமை செய்தனர்.ஒரு பெரு
ஆதிக்க இனத்திட்கெதிராக, அவர் உலக உதவிகளுக்கெதிராக
இறுதிவரை போராடினர் இது வரலாறு.
                                          சில குடும்பங்கள் அதிக பங்களிப்பை
செய்ய பல குடும்பங்கள் குளிர் காய்ந்தன.இதுவும் வரலாறு.
சில குடும்பங்களில் பல போராளிகள் ,பல குடும்பங்களில்
ஒரு போராளி கூட இல்லை.இருந்த போராளிகள் மிக அதிக
சுமையை சுமந்தனர். காயங்களால் அங்கம் இழந்தும் சுமை
தாங்கியாயினர்.சில குடும்பங்கள் முழுமையாய் விடுதலைக்காய்
எதையாவது பங்களித்தனர்.எதிரியால் மட்டுமல்ல சுயநலவாதிகளாலும்
எம் போராட்டம் பின்நகர்த்தப்பட்டது.
                                         விடுதலைக்காய் உழைத்தவர் குடும்பங்கள்
சோகக்கடலுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டன.மதில் மேல்
பூனைகளும்,எட்டப்பர்களும் தியாகங்களை கொச்சப்படுத்துகிறார்கள்.
வரலாறு தேங்குவதில்லை.தர்மம் வெல்லும்.இந்த பூமியில்
எல்லா நிகழ்வுகளும் பதியப்படும்.
                                            அடக்குமுறைக்குள் வாழும் மக்கள்
உடைத்து வாழ / சாகத்தான் விரும்புவர் . சுதந்திரத்திற்கு
ஈடு,இணையாய் இவ்வுலகில் ஏதும் இல்லை.திலீபன்
கனவு எப்போது நனவாகும்?
      


Share/Save/Bookmark

புதன், 15 பிப்ரவரி, 2012

கொலைவெறிடா டேய் கொலைவெறிடா...



Share/Save/Bookmark
http://www.youtube.com/watch?v=EG4rBPlkIO8


Share/Save/Bookmark

சனி, 11 பிப்ரவரி, 2012

விடுதலைப்புலிகளை குற்றம் சொல்லல் நியாயமா?

                                      விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியவரை சுட்டார்கள், ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள்.மக்கள் மீது 
அவர்களுக்கு அக்கறையில்லை என்று அபாண்டமான முழுப்பொய்யை 
உலகம் மீது திணிக்க சிங்கள அரசும்,அவர் கூட்டுகளும் முயல்கின்றன.
                                       உண்மையில் அங்கு என்ன நடந்தது?
                 விடுதலைப்புலிகள் இயன்றவரை போராட்டத்தை தக்கவைக்க 
முழு முயற்சி எடுத்தார்கள்.விடுதலைப்புலிகள் பொதுவில் என்றுமே 
தங்களுக்காய் வாழ்ந்ததில்லை.ஆளணியும்,ஆயுதபலமும் உலக 
சிங்கள கூட்டால் சிதைக்கப்பட்டபோது அதை மீள கட்டி எழுப்ப 
அவர்கள் பட்டபாடு/ உழைப்பை யாரறிவார்?
                                      வீட்டுக்கொருவர் போராட வருமாறு விடுதலைப்புலிகள் 
அழைப்பு விடுத்து அதை செயற்படுத்திய போது அதற்கும் எதிர்ப்பு 
வந்ததுதான்.பலரின் விடுதலை பற்றிய உண்மைமுகம் தமது குடும்பம் என்று வருகையில் வெளியில் 
அலங்கோலமாய் தெரிந்ததும் உண்மை.  இந்த திட்டம் போராட்ட 
காலங்களில் வேறு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான்.இதற்குள் 
பதினாறு வயது நிரம்பியவர்கள் தான் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் . 
மருத்துவரீதியில் பரிசோதித்து தகுந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
                                     இறுதிக்காலத்தில் சிங்களத்தால் வயது வேறுபாடின்றி 
திட்டமிட்டு மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் .யாரும் தப்புவது 
அவர்கள் அதிஷ்டமாகவே இருந்தது.களத்திற்கும், 
வாழ்நிலத்திட்கும் வேறுபாடு இருக்கவில்லை.விடுதலைப்புலிகள் 
வலுவானவர்களை இணையுமாறு அழைப்புவிடுத்து ,பலவந்தமாகவும் 
இணைக்கவேண்டிய நிலையை உலகம் ஏற்படுத்தியது.  பலதளபதிகள்
தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்தார்கள்.அந்தபிள்ளைகளும், 
விழுப்புண் ஏற்றார்கள்,வீரச்சாவு அடைந்தார்கள்.
                                         ஆட்சேர்ப்பில் சிலதவறுகள் நடந்தன.இராணுவ பிரதேசத்திற்குள் சென்ற மக்கள் மீதும் சில சூட்டுச்சம்பவங்கள் நடந்தன.சிங்களமும் 
விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவி இருந்தது. இந்த சம்பவங்களால் 
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மிகக் கவலை அடைந்தனர்.
விடுதலைப்புலிகளின் தலைமையால் புலி உறுப்பினர்களுக்கு எந்தக்காரணம் 
கொண்டும் மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யக்கூடாது ,மீறினால் கடும் 
தண்டனை விதிக்கப்படும் என்று சுற்றறிக்கை வெளிவந்தது.சிலநாட்களுக்குப்பின்னும் மீள துப்பாக்கி பிரயோகம் நடந்ததும்
நடத்தியவர் இராணுவ பிரதேசத்திற்குள் ஓடி தப்பியதும் உண்மை.ஆனால் 
இவை அங்கொன்றும், இங்கொன்றுமாய்த்தான் நடந்தது. ஆனால் 
சிங்கள இராணுவத்தால் தினமும் ஆயிரத்திற்கு மேல் மக்கள் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
                                              விடுதலைப்புலிகளில் இணைக்கப்பட்ட சிலரும் 
இணைக்கப்பட வேண்டிய சிலரும் பாதிரியார் ஒருவரின் ஒத்தாசையுடன் 
தேவாலயத்தினுள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.இந்நடவடிக்கையானது 
அச் சூழலுக்கு பொருத்தமற்றது,தவறானது.புலிகளும் மக்களுமாய் 
அவர்களை ஆட்சேர்ப்பில் பலவந்தமாய் இணைத்தனர்.ஒவ்வொருவருக்கும்   
வெவ்வேறு நீதி அங்கு இல்லை 
                                             காயமடைந்த மக்களுக்கு உடனடி முதலுதவி
வழங்குவதிலிருந்து சத்திரசிகிச்சை செய்வதுவரை விடுதலைப்புலிகளின்
மருத்துவப்பிரிவே முக்கிய பணியாற்றிற்று. சிறிலங்கா அரசால்
தடை செய்யப்பட்ட முக்கிய மருந்துகளையும்,இரத்தப்பைகளையும்
விடுதலைப்புலிகளே வழங்கி மக்களின் உயிர் காத்தனர்.எந்த தொற்று
நோயும் வராமல் இறுதிவரை தமீழீழ சுகாதார சேவையினர்
உழைத்தனர்.
                                     வைகாசி பதினைந்தாம் திகதிவரை மக்களுக்கு
கஞ்சி ஊற்றினர். ஒருநேர/ இரு நேர கஞ்சியுடனேயே விடுதலைப்புலிகள்
தமது கடமையை செய்தனர்.
                                      மக்களின் நலன் கருதி
இறுதி சுற்றுச்சண்டை தவிர்க்கப்பட்டது.    தலைமையால் உறுப்பினர்கள் சுயமுடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.பலர் போரிட்டு மடிந்தனர்.சில
பாரிய காயமடைந்த போராளிகள் தற்கொலை செய்தனர்.பலர்
இராணுவ வலயத்திற்குள் வந்து சரணடைந்தனர்/ பிடிபட்டனர்.சிலர்
தப்பிச்சென்றனர்.
                                   வைகாசி பதினாறுவரை விடுதலைப்புலிகளின்
நிர்வாகம் சீராக கட்டமைப்புடந்தான் இயங்கிற்று. 




Share/Save/Bookmark

புதன், 1 பிப்ரவரி, 2012

ஒரு ஊடகவியலாளனின் உழைப்பின் மீள்பார்வை

அது 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் யாழ் நகரெங்கும் மாவீரர் நினைவு 
அமைவிடங்கள் அமைக்கப்பட்டன.சிறந்த அமைவிட அமைப்பிற்கு 
பரிசு வழங்கப்படும் எனும் கதையும் உலாவிற்று.சங்கரத்தை சந்தியில் 
ஓவியன் தலைமையிலான அணி பேருந்துகளின் தகரங்களை 
சிரமங்களின் ஊடு கழற்றி, வர்ணம் பூசி, சங்கானையைச் சேர்ந்த 
ஓவியர் ஒருவரால் படங்கள் வரையப்பட்டன.படங்கள் அட்டகாசமாக 
இருந்தன.படங்களுக்கான விளக்க வரிகளை ஓவியன் தூரிகைகளால் 
அழகாக எழுதி இருந்தான்.யாழ்ப்பாணத்தை முழுமையாய் தரிசித்த 
பலராலும் இவ் அமைவிடமே சிறப்பானது என்று கூறி பாராட்டப்பட்டது.

1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் 
"வேதனை,சோதனை,சாதனை " என்ற தலையங்கத்தில் நீள் அரசியல் 
கட்டுரை ஒன்றை ஓவியன் எழுதினான்.இதுவே அவனால் எழுதப்பட்ட 
முதல்நீண்ட எழுத்துருவாகும்.அவனது பிரசுரமான முதல் சிறுகதையாக 
" கல்லறைக்குள் தீபம் ஓன்று " 1987 ஆம் ஆண்டு உதயனின் சஞ்சீவியில் 
பிரசுரமாயிற்று.
சமுதாயத்தில் காணப்படும் பின்னிலைக்கருத்துக்களை
மையமாக வைத்து ஏழு சிறுகதைகளை எழுதி "சமுதாயக்காயங்கள்"
என்ற தலையங்கத்தில் புத்தகமாக வெளியிட முயன்ற போது இந்திய 
இராணுவத்தால் எரிக்கப்பட்ட அவனது வீட்டோடு மூலப்பிரதிகளும் 
சாம்பலாயிற்று.
ஆங்காங்கே பத்திரிகைகளிலும் ,இதழ்களிலும் 
அவனது படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருந்தன.கவிதை,
கட்டுரை,சிறுகதை, ஓவியப்போட்டிகளிலும் பரிசுகள் பெற்றான். 
1999-2008 காலப்பகுதியில் வன்னியில் ஐநூறிட்கு
மேற்பட்ட சுகாதாரக் கண்காட்சிகளை திட்டமிட்டு நெறிப்படுத்தி 
நடத்தியதோடு அக்கண்காட்சிகளில் கலைநிகழ்வுகளையும் 
நெறிப்படுத்தி நடாத்தி இலச்சத்திட்கு மேற்பட்ட மக்களுக்கு 
நேரடிப்பயனை பெற உதவி தனது இலக்கில் குறிப்பிடத்தக்க 
வெற்றி பெற்றான்.
வன்னியில் இருந்த ஊடகங்களில் போதிய அளவு செய்தியாளர்கள் இல்லாததால்  தாம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் ஈழநாதம் ,புலிகளின்
குரல்,தமீழீழ தொலைக்காட்சி  ஊடகங்களுக்கு அனுப்பியும்வந்தான்.
ஒலி, ஒளி நாடாக்களை உருவாக்கியதோடு 
குறுந்தூர வானொலியை நடாத்துவதிலும் ஓரளவு வெற்றி 
பெற்றான்.
"விழி "மாதாந்த மருத்துவ இதழ்,"சுதேச ஒளி"
காலாண்டு இதழ்,ஆகியவற்றின் ஆக்ககர்த்தாவும்,ஆசிரியருமான 
அவன் "அக ஒளி"வருட சிறப்புமலர்களின் ஆக்ககர்த்தாவும்,மலர்  
ஆலோசகருமாய் கடமை செய்தான்.
போர் உச்சமடைந்த இறுதிக்காலத்திலும் 
பதுங்குகுழி அமைத்ததிலிருந்து,சுகாதார தடுப்புகள் பற்றிய 
செய்திகளை ,அறிவுறுத்தல்களை சிறு ஒலிபெருக்கிகளோடு கூட 
வாகனங்கள் தொடங்கி ஆட்டோ,துவிச்சக்கர வண்டியூடாகவும் 
துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் ஊடாகவும் நடாத்தினான்.
ஒலிநாடாக்களில் பதியப்பட்ட செய்திகள் புலிகளின் குரல் 
வானொலியிலும் மீள் ஒலிபரப்பாகிகொண்டிருந்தன. செய்திகளை 
கால் நடையாய் சென்று பரப்பும் பொறிமுறையைக்கூட   அவர்கள் 
கச்சிதமாய் செய்தார்கள் .
ஓய்வற்ற உழைப்பினில் இலும் அதற்குள் வாழும் 
இறுதிக்காலத்தை எழுத்தில் பதிவு செய்திருந்தான்.2009 வைகாசி 
12 ஆம் திகதி இராணுவத்தாக்குதலால்எரிகாயத்திட்கு 
உள்ளானதுடன் அவனது எல்லா ஆவணங்களும் மீண்டும் 
எரிந்து சாம்பலாயிற்று.உயிர் தப்பும் மிக மிக குறைந்த 
வாழ்விற்குள்ளால்  உயிர் மட்டும் தப்பியிருந்தது.      
ஒரு செய்தியை காத்திரமாக பரப்பிய ,
வெற்றி பெற்ற ஊடகவியலானாய்,தான் சார்ந்த ஊடகங்களை 
நடாத்திய பொறுப்பாளனாய் அவன் வாழ்கிறான்.
ஊடகவியலில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்த  
இவனின் ஏழு நூல்கள் இதுவரை பிரசுரமாகியுள்ளன.




Share/Save/Bookmark
Bookmark and Share