விடுதலை இயக்கமும்
ஒரு குடும்பம்தான்
இரண்டு/மூன்று தலைமுறைகள்
ஒன்றாய் வாழ்ந்தன
கவலைகள் இருந்தன
பிணக்குகள் இருந்தன
இருந்தும்
மகிழ்வுக்கு எல்லை இல்லை
சதா சா விழுங்கிய போதும்
மக்கள் நினைவில் வாழ்வு கரைந்திற்று
பிறந்த போது
பல உறவுகள் இருந்தாலும்
இயக்க குடும்பமே
உறவின் மேலாயிற்று
உலக சூழ்ச்சியால்
குடும்பகூடு எரிந்தாலும்
எஞ்சியோர்
அகிலமெங்கும் சிதறினர்
அநாதைகள் ஆகினர்
கல்லில் நாருரித்து
வாழ்வை மீள இழுத்தாலும்
ஒட்டவில்லை பூமியில்
சதா சகாக்களின் நினைவில்
பாரமாகிறது மனசு
நகரமுடியாமல்