செவ்வாய், 14 ஜூலை, 2015

"இனப்படுகொலை "

"இனப்படுகொலை "
ஜனநாயக மொழியிலும் சொல்லப்பட்டாயிற்று
உலகம் எதிர்பார்ப்பது என்ன?
வேறு என்ன மொழியில் சொல்லவேண்டியிருக்கிறது ?
நல்லிணக்கமா? அது என்ன?
செத்தவீட்டில் கல்யாணமா?

கலாச்சாரம் அமிலமாக்கப்படுகிறது
நிலம்,கடல் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது
தொழில் தங்கு தொழிலாகிறது
சிங்களக்குடியேற்றம் வேகமாகிறது
தலையிருக்க உடலெங்கும் ஓட்டைகள்
இராணுவமும் புலனாய்வும் வாழ்வை நெரிக்கிறது
கறையான் நிரம்பிய புத்தகமாய்க்கிடக்கிறது  தேசம்
நல்லிணக்கமா? அது என்ன?
சரணடைந்தவர்  எங்கே?
செவ்வாய்க்கிரகத்திற்காய் போனார்கள்

எந்த முகத்துடன் நல்லிணக்கம்?  

பிள்ளை துயின்ற இல்லத்தை
கிளறிய சிங்கமனிதனுடன்
தாய் கைகுலுக்குவாளா?
விடுதலைக்கான ஆத்மாக்கள்
தாம் நேசித்த உயிர்களுக்கு அருகிலே
சதா விழித்திருக்கும்
எந்தவித எதிர்பார்ப்புமின்றி
நல்லிணக்கமா? அது என்ன?


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share