ஞாயிறு, 19 நவம்பர், 2023

 நேற்றுப்போல் இருக்கிறது 

முதல் மாவீரனின் முதலாம் ஆண்டு நினைவு 

"ஓ ! சத்யநாதா " என்ற போஸ்டர் ஒட்டியது

1990 இல் சங்கரத்தை சந்தியில் 

மாவீரர் வளைவிற்கு வாசகம் எழுதியது 

1992 ஆம் ஆண்டு துயிலும் இல்லம் சென்றேன் - பின் 

ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும்  

துயிலும் இல்லம் செல்லமுடியா வேலைப்பளு      



Share/Save/Bookmark

வெள்ளி, 17 நவம்பர், 2023

திக்கற்றவரின் நெடும் பயணம்

 எங்கோ பிறந்து வளர்ந்தோம் 

மனசாட்சியால் ஒன்றானோம் 

தாயகமும் நாங்களும் 

உயிரோடு ஒன்றான உணர்வுகள் 

நீங்களில்லை 

இது யாருமற்ற வெளி 

நினைவுகளில் அசையும் ஒளி

எங்கே?

எங்களுக்குள் ஊடாடிய மொழி 

வாழ பல வழியிருந்தும் 

அந்த பாசாங்கில்லா வாழ்வு 

இன்று கவிஞன் இல்லை 

கவிதை இருக்கிறது

நினைவிடங்கள் நெஞ்சறைக்குள் 

தொடர்ந்தும் 

திக்கற்றவரின் நெடும் பயணம்  




Share/Save/Bookmark

ஞாயிறு, 5 நவம்பர், 2023

அம்மா என்னைப்பற்றி எழுதும் காலம் வரக்கூடாது

 அப்பா இப்போது இல்லை. நான் அப்பா அம்மாவை இறுதியாய் சந்தித்த நாள் அல்லது கணங்கள் எனக்கு ஞாபகம் இல்லை. அக்காலம் 2005 ஆம் ஆண்டுதான். அவர்களுக்கு கட்டாயம் ஞாபகம் இருக்கும். அவர்களுக்கு பிள்ளைகள் உலகம், எனக்கு அப்படியல்ல வேறு முக்கிய வேலைகள் இருந்தன. ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள்.

முன்பும் அம்மா அப்பாவை நேரில் பார்க்கமுடியாத காலங்கள் இருந்திருக்கின்றன, அக்காலங்கள் இவ்வளவு நீண்டவையல்ல. அம்மா "புலிகளின் குரல்" வானொலியில் பல மாவீரர்களின் நிகழ்ச்சிகளை மிகத்தத்துரூபமாக எழுதியிருக்கிறார். அவர் ஒரு மாவீரரின் தாய் என்பதால் அந்த எழுத்தோட்டம் உயிர்பெற்றிருக்கலாம். நான் தூர இடங்களில் இருக்கும் போது கூட அந்த நிகழ்ச்சிகளை தவறவிடுவதில்லை. அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன் அம்மா என்னைப்பற்றி எழுதும் காலம் வரக்கூடாது என்று. 



Share/Save/Bookmark

சனி, 4 நவம்பர், 2023

 கவிமகனின் கரம்பு நிலத்து கதைகள்  

கவிமகனின் கரம்பு நிலத்து கதைகள் தமிழ் இலக்கிய உலகில் புது வரவாகும்

உண்மைக்கதைகள். யார் இந்த கவிமகன்? தாய்தேசம் விடுதலை பெற போராடும் காலம்

அதற்குள் பிறந்து வளர்ந்தவன், விடுதலையோடு பயணித்த ஒரு தந்தையின்/ எழுத்தாளரின்

ஒற்றைமகன். இவன் ஆசிரியர்களால் மட்டுமல்ல எழுத்தாளத்தந்தையாலும் புடம் போடப்பட்டு

எழுத்துலகத்திற்குள் நிலைத்திருப்பவன். ஈழத்தமிழினத்தின் விடுதலைப்போராட்ட

நிலப்பரப்புக்குள் இரத்தமும் சதையுமாய் வாழ்ந்தவன், சிறுவயதிலேயே போராட்ட வாழ்வின்

இன்ப துன்பங்களை அறிந்தவன். ஏற்கனவே இவனது இரண்டு இலக்கியப்புத்தகங்கள்

வெளிவந்துவிட்டன. இந்த சிறுகதைத்தொகுதியும் இவனை யார் என்று உலகிற்கு துல்லியமாய்

வெளிக்காட்டும்.

2009 ஆம் ஆண்டில் எமது போராட்டத்தில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்களால் சிங்கள அரசின் அதிகாரப்பிடி அதிகரித்துவிட்டது. சிங்கள அரசு எமது போராட்ட வரலாறை தவறாக புனைவதன் ஊடாக எமது மக்களின் விடுதலைக்கனவை இல்லாமல் ஆக்க பிரயத்தனப்படுகிறது, இதற்காக எமது விடுதலை வரலாறை இலக்கியவடிவில் தவறாக புனைய அரசோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இயங்கும் சில தமிழர்களையும் வீச்சாக பயன்படுத்திவருகிறது. தமிழரிடம் எந்த அதிகாரமும் இல்லாத இக்காலத்தில் தமிழர் விடுதலை அவாவி துணிந்து எழுதுகிற  எழுத்தாளர்களுள் கவிமகனும் ஒருவர். அவர் தொடர்ந்தும் எமது மக்களின் விடுதலைக்குரலாக ஒலிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.


நன்றி

 

கா.சுஜந்தன்



Share/Save/Bookmark
Bookmark and Share