எங்கோ பிறந்து வளர்ந்தோம்
மனசாட்சியால் ஒன்றானோம்
தாயகமும் நாங்களும்
உயிரோடு ஒன்றான உணர்வுகள்
நீங்களில்லை
இது யாருமற்ற வெளி
நினைவுகளில் அசையும் ஒளி
எங்கே?
எங்களுக்குள் ஊடாடிய மொழி
வாழ பல வழியிருந்தும்
அந்த பாசாங்கில்லா வாழ்வு
இன்று கவிஞன் இல்லை
கவிதை இருக்கிறது
நினைவிடங்கள் நெஞ்சறைக்குள்
தொடர்ந்தும்
திக்கற்றவரின் நெடும் பயணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக