அப்பா இப்போது இல்லை. நான் அப்பா அம்மாவை இறுதியாய் சந்தித்த நாள் அல்லது கணங்கள் எனக்கு ஞாபகம் இல்லை. அக்காலம் 2005 ஆம் ஆண்டுதான். அவர்களுக்கு கட்டாயம் ஞாபகம் இருக்கும். அவர்களுக்கு பிள்ளைகள் உலகம், எனக்கு அப்படியல்ல வேறு முக்கிய வேலைகள் இருந்தன. ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள்.
முன்பும் அம்மா அப்பாவை நேரில் பார்க்கமுடியாத காலங்கள் இருந்திருக்கின்றன, அக்காலங்கள் இவ்வளவு நீண்டவையல்ல. அம்மா "புலிகளின் குரல்" வானொலியில் பல மாவீரர்களின் நிகழ்ச்சிகளை மிகத்தத்துரூபமாக எழுதியிருக்கிறார். அவர் ஒரு மாவீரரின் தாய் என்பதால் அந்த எழுத்தோட்டம் உயிர்பெற்றிருக்கலாம். நான் தூர இடங்களில் இருக்கும் போது கூட அந்த நிகழ்ச்சிகளை தவறவிடுவதில்லை. அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன் அம்மா என்னைப்பற்றி எழுதும் காலம் வரக்கூடாது என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக