சனி, 4 நவம்பர், 2023

 கவிமகனின் கரம்பு நிலத்து கதைகள்  

கவிமகனின் கரம்பு நிலத்து கதைகள் தமிழ் இலக்கிய உலகில் புது வரவாகும்

உண்மைக்கதைகள். யார் இந்த கவிமகன்? தாய்தேசம் விடுதலை பெற போராடும் காலம்

அதற்குள் பிறந்து வளர்ந்தவன், விடுதலையோடு பயணித்த ஒரு தந்தையின்/ எழுத்தாளரின்

ஒற்றைமகன். இவன் ஆசிரியர்களால் மட்டுமல்ல எழுத்தாளத்தந்தையாலும் புடம் போடப்பட்டு

எழுத்துலகத்திற்குள் நிலைத்திருப்பவன். ஈழத்தமிழினத்தின் விடுதலைப்போராட்ட

நிலப்பரப்புக்குள் இரத்தமும் சதையுமாய் வாழ்ந்தவன், சிறுவயதிலேயே போராட்ட வாழ்வின்

இன்ப துன்பங்களை அறிந்தவன். ஏற்கனவே இவனது இரண்டு இலக்கியப்புத்தகங்கள்

வெளிவந்துவிட்டன. இந்த சிறுகதைத்தொகுதியும் இவனை யார் என்று உலகிற்கு துல்லியமாய்

வெளிக்காட்டும்.

2009 ஆம் ஆண்டில் எமது போராட்டத்தில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்களால் சிங்கள அரசின் அதிகாரப்பிடி அதிகரித்துவிட்டது. சிங்கள அரசு எமது போராட்ட வரலாறை தவறாக புனைவதன் ஊடாக எமது மக்களின் விடுதலைக்கனவை இல்லாமல் ஆக்க பிரயத்தனப்படுகிறது, இதற்காக எமது விடுதலை வரலாறை இலக்கியவடிவில் தவறாக புனைய அரசோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இயங்கும் சில தமிழர்களையும் வீச்சாக பயன்படுத்திவருகிறது. தமிழரிடம் எந்த அதிகாரமும் இல்லாத இக்காலத்தில் தமிழர் விடுதலை அவாவி துணிந்து எழுதுகிற  எழுத்தாளர்களுள் கவிமகனும் ஒருவர். அவர் தொடர்ந்தும் எமது மக்களின் விடுதலைக்குரலாக ஒலிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.


நன்றி

 

கா.சுஜந்தன்



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share