வியாழன், 25 ஏப்ரல், 2024

அன்று கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் இன்று மரணச்சடங்குகளே கடன் வாங்கி நடக்கிறது சுய பொருளாதாரம் கப்பலேறிவிட்டது கப்பலே இலங்கை வேந்தனுடையதுதான்


Share/Save/Bookmark

சனி, 20 ஏப்ரல், 2024

எந்த வீணையிலும் எழமுடியா இசையை மழலை மொழியில் கேட்டேன் உள்ளங்கைகளில் தெரியா ரேகைகளை ஏழையின் முகத்தில் பார்த்தேன் கவிதைகளில் எழுதா உணர்வுகளை கரும்புலியின் பிரிவில் உணர்ந்தேன் நெருப்பையும் கடந்த அனலை தாய்நிலம் பிரிகையில் சுமந்தேன்


Share/Save/Bookmark
நினைவுகளில் தொக்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும் சன்னங்கள் சுடும் காயங்களும் ஆறுவதில்லை பிறந்தோம் வளர்ந்தோம் தாய்(மண்)மனம் அறிந்தோம் இலகு வாழ்வு துறந்தோம் இலக்கு வாழ்விற்காய் நாலு பேர் சுமந்து போனார்கள் சாம்பலாய் பூத்தது வாழ்வு யாரோ ஒருவன் நினைவை சுமப்பான் இதுதான் நியதி


Share/Save/Bookmark

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பசேலென்று குடைபோல் விரிந்திருந்த ஆலமரம் விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது வழிப்போக்கருக்கு ஓய்விடம் சிறார்களுக்கு ஒரு சிறுவானம் திடீரென சந்தையாகும் ஆலடி சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம் ஆச்சியும் அறிந்த இடம் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும் காலையும் மாலையும் ஊர்சுற்றி மதியம் இங்கு சந்திப்போம் இன்று பிரதேசபை தறித்துவிட்டது வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும் எங்களுக்குள்ளும் ஊருக்கே இணைப்பாக இருந்தது இன்றில்லை நாளை பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர் பறவைகள் தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன


Share/Save/Bookmark

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

மனிதருள் வேற்றுமையில்லை அடங்கி வாழ போவதில்லை அகங்கார அதிகாரத்திற்கு எதிர் சமதர்மம் வாழ்வின் உயிர்


Share/Save/Bookmark
உன் நினைவில் இருந்தேன் பிறக்கடித்தது எங்கோ இருக்கிறாயா? மூடநம்பிக்கை எட்டிப்பார்த்தது கனவிலும் வந்தாய் கண் திறக்க மாயமானாய் தொடர்புகளில் நீ இல்லையெனினும் என் இயங்கியலை ஆக்கிரமிக்கிறாய்


Share/Save/Bookmark

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வேடர்கள் வருகிறார்கள்

வன அமைதியை கிழித்து செல்கிறது ஒரு பறவையின் கூச்சல் வேடர்கள் வருகிறார்கள் வனஉயிரிகளின் நாளாந்தம் கலைகிறது பச்சைக்காடுகளில் சிவப்பு கலக்கிறது தொங்குநாக்குகளுடன் நாய்கள் அங்குமிங்கும் திரிகின்றன நாய்கள் வனத்தில் வாழ்வதில்லை இறைச்சியோடு வரும் வேடர்களை வரவேற்கும் இருகால் உயிரினங்கள் வேடரின் நாய்களை கவனிப்பதில்லை


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

வயலை தொடர்ந்திருந்தது பற்றைக்காடு சிறார் எங்களுக்கு வயல் ஒரு உலகம் அக்காடு பிறிதொரு உலகம் வயலின் குளிர்மையில் ஒன்றாவோம் காற்றில் சிலிர்ப்போம் மிதப்போம் செம்பகம் மைனா கிளியென பறவைகள் எமை பரவசப்படுத்தும் முயல்களை துரத்துவோம் பற்றைக்காட்டில் பனை கொய்யா ஈச்சமரங்கள் இன்னும் பல அணில் உடும்பு என அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிய பல காட்சிகள் எதுவும் இன்றில்லை


Share/Save/Bookmark

சனி, 6 ஏப்ரல், 2024

காணாமல் போனவனின் தாய்

2008 ஆம் ஆண்டு காலம் அவன் தாயாருடன் மல்லாவியில் வசித்தவன் வவுனியாவுக்கு போனவன் திரும்பிவரவில்லை உறவென்று ஒரு வளர்ப்புநாய் குடிசை முன்குந்தில்த்தான் அவன் உறங்குவான் காலடியில் நாய் படுத்திருக்கும் அவன் இல்லையெனில் முற்றத்தில் விழித்திருக்கும் இறுதி யுத்தத்தில் மல்லாவி இடப்பெயர்வன்று நாய் திடீரென குந்தில் ஏறிப்படுத்தபடி அங்கேயே இறந்து போயிற்று 2024 ஆம் ஆண்டு காலம் அன்று தொட்டு இன்றுவரை மகனை தேடி வவுனியா சென்று கப்பம் கொடுத்தும் ஒன்றும் இல்லை அழுவதற்கு கண்ணீர் இல்லை நாவும் வறண்டு வெடித்துப்போயிற்று மூச்சிழந்து வீழ்ந்தாள் காணாமல் போனவனின் தாய் அழுதபோதும் கண்ணீர் வரவில்லை எனின் அதன் வேதனையை யார் அறிவார்? அழும் குரலின் கேரலை கேட்டிருக்கிறாயா? துயர்ப்பாடலில் நடுங்குகிறது சுற்றம் தாயே ! இனி உனக்கு சோகம் இல்லை நீதியோடு உன் உடலும் எரியட்டும்


Share/Save/Bookmark

வியாழன், 4 ஏப்ரல், 2024

வாழ்க்கையில் கணம் இல்லை யாவரும் பரஸ்பரம் கனம் பண்ணுவார் இன்று அப்படியல்ல இடிந்து கிடந்த கட்டிடக்குவியலில் ஒற்றைக்கையை வைத்து உன்னை அடையாளம் கண்டேன் பசித்த வயிறுக்கு சோறு போட்ட கையம்மா சாகாவரம் ஒன்றை நீ கேட்டாய் அன்பை பரிசளித்தார் கடவுள் சாகாவரம் இளமையில் இனிப்பாகவும் முதுமையில் தனிமையில் கசப்பாகவும்


Share/Save/Bookmark

புதன், 3 ஏப்ரல், 2024

மகுடியில் எழும் இசைக்கு பாம்புகள் நாடிவருகின்றன இசையென்பது யாரையும் கட்டிப்போடும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு இசை பிடிக்கும் விலங்குகளுக்கும்தான் இசை வந்த திசையில் காற்றில் உலாவும்


Share/Save/Bookmark
Bookmark and Share