வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பசேலென்று குடைபோல் விரிந்திருந்த ஆலமரம் விழுதுகளையும் ஊன்றி உறுதி தளராதிருந்தது வழிப்போக்கருக்கு ஓய்விடம் சிறார்களுக்கு ஒரு சிறுவானம் திடீரென சந்தையாகும் ஆலடி சுற்றுக்கே குளிர்தரும் கற்பகம் ஆச்சியும் அறிந்த இடம் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும் காலையும் மாலையும் ஊர்சுற்றி மதியம் இங்கு சந்திப்போம் இன்று பிரதேசபை தறித்துவிட்டது வெக்கையும் வேர் பிடுங்கிய குழியும் எங்களுக்குள்ளும் ஊருக்கே இணைப்பாக இருந்தது இன்றில்லை நாளை பெருங் கட்டிடம் எழும் என்கின்றனர் பறவைகள் தரிப்பிடம் இழந்து பறந்துகொண்டிருக்கின்றன


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share