திங்கள், 26 ஏப்ரல், 2010

காதல் -சிறு குறிப்பு

பூவைப் போல
காதல் இல்லை
பூ உதிர்ந்து விடும்
வேரைப்போல
காதல் வேண்டும் .
மழைக்காலத்தில் வரும்
சூரிய ஒளியைப்போல
காதல் தேவைப்படுகிறது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
விலங்குகளுக்கும் தான்.



Share/Save/Bookmark

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அம்மா அது உனக்குப் போதும்

தாயை திருப்பி
அனுப்பியது இந்தியா.
படுக்கை,
பக்கவாத நோயாளிக்கு
வர விசா வழங்கி
வந்த பின்
திருப்பியது இந்தியா
வெந்தது ஈவு,இரக்கம்.



Share/Save/Bookmark

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காற்றினில் செல்லும் புலம்பல்

அப்பா அம்மா
மனைவி பிள்ளைகள்
வீடு சமூகம் இனம் என்ற
கட்டுக்கோப்புகள்
மணல்வீடு ஆகிடுமா?

வனம் கூட அழியாமல்
காவல் காத்த தெய்வங்கள்
எங்கே?
நாடு,மக்கள் என்று
துளியும் சுயநலமற்ற
மாவீரர் அவர்
சுவடுகள் எங்கே?

ஆசையாய்,அன்பாய்,
ஒரு கூடாய்
வாழ்ந்த வாழ்விழந்து
அனாதையாய்
அந்நிய தெருக்களில்
அந்தரிக்கிறது
அற்ப மனசு.
இயங்க மறுக்கிறது
தேய்ந்த உடல்.
தெருநாய்களை விட
மோசமாய்ப் போயிற்று
குஷ்டரோக வாழ்வு.

நம்பிய இனத்தை
நட்டாற்றில் விட்டு
நரபலி போகிறது ஆத்மா.

ஒரு இனமாய்
ஒன்றுபடமுடியாமல்
ஒவ்வொரு கட்சியாகிறது இனம்.
மேய்ப்பன் அற்று
ஆடுகள் அங்கும் இங்குமாய்
அலைக்கழிகின்றன.

பச்சைப்பிள்ளை கூட
நித்தம்
தீ மிதிக்கிற வாழ்வு.
வாய்க்கரிசி போடும் அரசியல்.
அடிவருடிகள்
குழம்பிய குட்டைக்குள்
மீன் பிடிக்கிறார்கள்.
மரணித்த மாரித்தவளையாய்
பிரண்டு கிடக்கிறது இனம்.

ஆற முடியாச் சோகம்
மீள இயலா இழப்பு
சிலுவை சுமக்கும் நினைவு
வாழ வேண்டிய பொறுப்பு.

மரணம் வாழ்வின் முடிவல்ல .

தர்மம் தோற்பது போல் வெல்லும்.

-சுருதி-

 


Share/Save/Bookmark

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

விடுதலையும் காதலைப் போல

இன அழிப்பு
அல்லது இனச்சுத்திகரிப்பு
இனக் கலப்பு
நிலப்பறிப்பு
ஈழத்தமிழரை
இல்லாதாக்கும்
சிங்களக் கனவு நனவாகுமா?
கோடரிக்காம்புகள்,
விலாங்கு மீன்களுக்கு
என்ன நடக்கும்?
வாழும் உரிமைதான் போகிறது
வாழ்ந்த அடையாளமுமா?



Share/Save/Bookmark

சனி, 3 ஏப்ரல், 2010

ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு

 எங்கள் கண்ணீரில்
கை,கால்,முகம் எல்லாம்
கழுவுகிறார் சிங்களர்.

ஒன்றுமில்லாது
ஒதுங்கிக் கிடப்பவரை
வேடிக்கை பார்க்க
தெற்கில் இருந்து
தினம் வருகிறது
மக்கள் கூட்டம்.
காயத்திற்கு
மிளகாய்த்தூள் தடவுவது போல்.



Share/Save/Bookmark
Bookmark and Share