சனி, 6 ஏப்ரல், 2024

காணாமல் போனவனின் தாய்

2008 ஆம் ஆண்டு காலம் அவன் தாயாருடன் மல்லாவியில் வசித்தவன் வவுனியாவுக்கு போனவன் திரும்பிவரவில்லை உறவென்று ஒரு வளர்ப்புநாய் குடிசை முன்குந்தில்த்தான் அவன் உறங்குவான் காலடியில் நாய் படுத்திருக்கும் அவன் இல்லையெனில் முற்றத்தில் விழித்திருக்கும் இறுதி யுத்தத்தில் மல்லாவி இடப்பெயர்வன்று நாய் திடீரென குந்தில் ஏறிப்படுத்தபடி அங்கேயே இறந்து போயிற்று 2024 ஆம் ஆண்டு காலம் அன்று தொட்டு இன்றுவரை மகனை தேடி வவுனியா சென்று கப்பம் கொடுத்தும் ஒன்றும் இல்லை அழுவதற்கு கண்ணீர் இல்லை நாவும் வறண்டு வெடித்துப்போயிற்று மூச்சிழந்து வீழ்ந்தாள் காணாமல் போனவனின் தாய் அழுதபோதும் கண்ணீர் வரவில்லை எனின் அதன் வேதனையை யார் அறிவார்? அழும் குரலின் கேரலை கேட்டிருக்கிறாயா? துயர்ப்பாடலில் நடுங்குகிறது சுற்றம் தாயே ! இனி உனக்கு சோகம் இல்லை நீதியோடு உன் உடலும் எரியட்டும்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share