மண்டேலா பெரும்பான்மை
ஈழத்தமிழினம் சிறுபான்மை
பெரும்பான்மை பெரும்பான்மைதான்
சிறுபான்மை இனத்தவர் கூட
காவடி தூக்கினர்
பெரும்பான்மையினருக்காய்
படித்தவர் பலர் ஆதாயம் பார்த்தே
ஆதரவு வழங்கினர்
இதுதான்
எங்கள் மண்ணிலும் நடந்தது நடக்கிறது
யார் மீதும் குற்றமில்லை
எல்லாம் வியாபாரம்தான்
சிறுபான்மை யினருக்கு
துணையாய் கூட நாடில்லை
முதுகில் குத்த நாடு இருந்தது
பெரும்பான்மையிற்கு நாடும்
துணையாய் நாடுகளும் இருந்தன
சிறுபான்மையினரோடு சேர்வதால்
ஆதாயம் இல்லை - அதனால்
சிறுபான்மையினரிலும் சிறுபான்மையே
இனத்திற்காய் பளு தூக்கிற்று
தோல்வியிலும்
எழமுடியாமல் சருகாயிற்று
எல்லாம் யதார்த்தம்தான் - இது
என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக