வெள்ளி, 17 ஜூலை, 2015

என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்


மண்டேலா பெரும்பான்மை
ஈழத்தமிழினம் சிறுபான்மை
பெரும்பான்மை  பெரும்பான்மைதான் 
சிறுபான்மை இனத்தவர் கூட
காவடி தூக்கினர் பெரும்பான்மையினருக்காய்
படித்தவர் பலர் ஆதாயம் பார்த்தே
ஆதரவு வழங்கினர்  
இதுதான்
எங்கள் மண்ணிலும் நடந்தது நடக்கிறது
யார் மீதும் குற்றமில்லை
எல்லாம் வியாபாரம்தான்

சிறுபான்மை யினருக்கு
துணையாய் கூட நாடில்லை
முதுகில் குத்த நாடு இருந்தது
பெரும்பான்மையிற்கு  நாடும்
துணையாய் நாடுகளும் இருந்தன 
சிறுபான்மையினரோடு சேர்வதால்
ஆதாயம் இல்லை - அதனால்
சிறுபான்மையினரிலும் சிறுபான்மையே
இனத்திற்காய் பளு தூக்கிற்று
தோல்வியிலும்
எழமுடியாமல் சருகாயிற்று
எல்லாம் யதார்த்தம்தான் - இது
என் இனத்திற்கு படிப்பினையாகட்டும்



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share