வியாழன், 16 ஜூலை, 2015

என் பணி செய்தேன்


எமக்கென்று ஒரு நாடு இருந்தது
பிச்சைக்காரர் அற்ற நாடு அது
எங்களின் உழைப்பில் ஒளிர்ந்த நாடு அது 
எண்களில் நாம் சிறியோர்தான் - இருந்தும்
உழைப்பில் உயர்ந்தோர் ஈழ வரலாற்றில் 
யாரின் கண்பட்டதோ
எதிரியோடு உலக கயவர் எல்லாம்
படை ஏவினர் எம்மீது
குழந்தை குஞ்சுகளையும் எம்முன் கொன்று
எம் உளம் சிதைத்தனர்

நாடு இழந்தேன்  ஏதிலி ஆனேன்
அந்நியமண்ணில் நாயாய்த்திரிந்தேன்  
அகதியானபோதும் சாட்சியானேன்
என்ன ஆச்சரியம்
பெரிய இடத்தவர் எல்லாம்
ஒரு அகதியை சந்தித்து போனார்கள்
இரவுகளில் நித்திரை இல்லை
நிம்மதி இல்லை
ஒன்றரைவருடம் செக்கு இழுத்தேன்
என் இனமே!
என்னை உனக்கு தெரியவேண்டாம்
என் பணி செய்தேன்
எனக்கு அது போதும்       



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share