திங்கள், 19 செப்டம்பர், 2022

விடுமுறைநாளில் பனிக்கால காலை

 அதிகாலை 

பனி கீழிறங்கிக்கொண்டிருந்தது 

வீட்டினுள் குளிர் புகுந்து தட்டியெழுப்பியது 

யன்னலருகில் நான் 

கலங்கி பறைந்தது சுற்றம் 

வெளிராய் உறைந்த வீதிகள்

விதி தப்பவைத்தது விடுமுறைநாள் 

கம்பளியையும் தாண்டி ஈரல் நடுங்கிற்று 

விறைத்து பார்த்துக்கொண்டிருந்தேன் 

மெதுமெதுவாய் வந்தான் ஆதவன் 

சாகசங்கள் புரிந்தான் 

வெள்ளம்புவிட்டு என்னையும் வீழ்த்தினான் 

என்னையறியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் 

குளிர் கால ஆதவன் 

ஆகா என்ன சுகம் 

நேரம் போக போக சுட்டெரித்தான் 

யன்னலை மூடுகிறேன்

காலையொன்று காணாமல் போகிறது 

          



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share