ஞாயிறு, 9 நவம்பர், 2014

காத்திருப்பு

ஆயிரம் ரூபா பணத்தை
தட்டிப்பறித்தான் தாதா
பணம் இழந்தவன் குளறினான் 
அயல்களுக்கு கேட்டது
அயல்கள் வந்தன உதவி புரிவதுபோல்
புரிந்தன உதவி தாதாவிற்கே 
பணம் பத்தும் செய்யும்
வெள்ளைப்புறா நரியாயிற்று

தாதா விழா எடுத்து
ஐம்பது சதத்தை திருப்பி கொடுக்கிறான்
கொல்லைப்புரத்தில் உடுபுடவை  மட்டுமல்ல 
அத்திவாரமேபறிபோகிறது
ஒட்டுண்ணி  ஐம்பது சதத்தை
வரப்பிரசாதம் என்கிறான்
அணில் ஏறவிட்ட நாயாய் "காத்திருப்பு"





Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share