வியாழன், 4 அக்டோபர், 2012

போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?




இறைக்க இறைக்க 
கிணற்றில் மட்டுமல்ல 
கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று
துயரப்பெருங்கடலில் 
அலைகளாய் 
உடல்களற்ற தலைகள் எழுந்தன 
உறைந்த குருதியை 
மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் 
பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி?
நவீன உலகம் 
புலியை கொல்ல காட்டை எரித்தது 
அதனால்  அனைத்தும் எரிந்தது 
 போலிச் சிங்கத்தின் 
பிடரி மயிரும் சிலிர்த்தது

உலகமயமாக்களில் கரைந்து,
காணாமல் போயிற்று 
எம் வாழும் சுதந்திரம் 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share