ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

இன்று மேதினம் . தொழிலாளர்களின் தினம். ஈழத்தில் எம் இனம் காயங்களோடு இருக்கிறது . மறைமுகமாக அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. பூர்வீக இருப்பை இழந்துகொண்டிருக்கிறது. நலிந்துபோய் இருப்பதால் நாளாந்தத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்குள் ஒன்றாகமுடியா சாபம் தொடர்கிறது. நாங்கள் ஆக்கிரமிப்பாளனை மறந்து எங்களுக்குள் மோதிக்கொள்கிறோம். எங்களிடம் உள்ள கொஞ்ச சக்தியையும் இழந்துவிடுகிறோம். எங்களை பாதுகாக்கக்கூடிய அரசியல் தீர்வை சிங்களம் தரப்போவதில்லை. இன்றில்லையாயினும் போராட்டம் மீண்டும் எம்மக்களில் இருந்து எழப்போவது தவிர்க்கமுடியாததும் கவலையானதும்தான்  .
ஒவ்வொரு மேதினத்தின் போதும் என் நினைவில் மலையகத்தில் வாழும் என் சகோதரமக்களே இருப்பார்கள். ஒரு தடவை தலைவர் அவர்களோடு உரையாடும்போது தலைவர் அவர்கள் சொன்னார்கள் விரும்புகிற மலையக மக்கள் "  அறிவியல் நகரில் " வந்து குடியேறலாம்.
( நாம் அறிவியல் நகர் திட்டமிடலில் இருந்தகாலம்) .      



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share