ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இப்ப நான் மட்டும் தனிமையில்

நண்பன் திலீபனின் நினைவுகளை சுமந்து 30 வருடங்கள் ஆகிறது . இன்றைய நாளும் எனக்கு கடினமாக இருக்கிறது. இயக்கத்தில் இருந்த காலங்களில் அவன் இல்லை என்பது பெரிதாக தெரியவில்லை. இயக்கம் சொன்னால் நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற இறுமாப்பில் வாழ்ந்தேன். இன்றைய நாட்கள் குற்ற உணர்வில் கழிகிறது.
என் அம்மம்மா மரவள்ளிக்கிழங்கு அவித்து ஒரு சருவத்திலேயும் சிகப்பு சம்பல் ஒரு சாப்பாட்டுக்கோப்பையிலேயும் தருவா. நான், திலீபன், அருணன் சுற்றி இருந்து சாப்பிடுவம். இப்ப நான் மட்டும் தனிமையில்.  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share