புதன், 5 ஜனவரி, 2022

 வருடம் போகிறது வருகிறது 

ஒரு டசின் வருடங்களாய் தினக்குறிப்பு எழுதவில்லை

அந்த அழகான கையெழுத்துக்களுடன் 

தினக்குறிப்பு ஏடு கிடைப்பதில்லையே!

   

கனவுகளுடன் விதைக்கப்பட்டவர் நினைவில் 

நாளும் பொழுதும் கழிகிறது 

எதிர்பார்ப்புகள் இல்லா எஞ்சிய வாழ்விலும் 

கொள்கையில் சமரசங்கள் இல்லை 


தாயகத்தில் மரம் நிறை பறவைகளில் ஒன்றாய் 

களித்திருந்த நாட்கள் போய் 

அந்நியதேசத்தில் தனி(வி)த்து வேகும் விதியை   

ஒருபோதுமே நினைத்திருக்கவில்லையே !   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share