என் சகதோழன் மரணிக்கையிலும்
எம் பகைவன் மரணிக்கையிலும்
என்னால் சுமக்கமுடிவதில்லை
அவர் குழந்தைகளின் முகங்களை
நண்பா! பகைவா!
நீயும் பார்த்திருப்பாய்
தாயின் புத்திரசோகத்தை
எப்படி கடந்திடுவோம் ?
இந்த பாதாளத்தினை
பகைவனே!
ஏன் நான் உனை வெறுக்கிறேன் ?
என் மக்களின் சுதந்திரத்தை தடுக்கிறாய்
உன் பிள்ளைகளையே தாயையோ
நான் வெறுத்ததில்லை
உன்னால் அது முடியுமா?
நான் என் மக்களை நினைக்கிறேன்
எப்போதும் என் மக்களை நேசிக்கிறேன்
நீ அதிகாரத்தை நேசிப்பதாய்
நான் நினைக்கிறேன்
அது தவறாகவும் இருக்கலாம்
ஏன் என் தாயகத்தை அபகரிக்கிறாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக