ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை நினைவு

கிளிநொச்சி நகரில் சுமார் ஐந்து வருடங்களுக்கு பின் மக்கள் மீள்குடி யேறத்தொடங்கினர். நீண்டகால இடைவெளி என்பதால்  கிளிநொச்சி பற்றைகளாலும் பாம்புகளாலும் கண்ணிவெடிகளாலும் நிரம்பிக்கிடந்தது.
யுத்த சூழலின் போதும் மக்களின் மீள்குடியேற்றத்தித்காய் கிளி பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை (தனியார்)10/02/2001 அன்று ஆரம்பிக்கப்பட்டு 2008 ஆண்டுவரை தன் பணியை ஆற்றிற்று. இந்த  மருத்துவமனையின் சீரிய பணிக்கு பலமருத்துவர்கள், பணியாளர்கள்,நிர்வாகிகள் உழைத்திருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் பல நூறு பிரசவங்கள் வெற்றிகரமாய் நடந்திருக்கின்றன.எந்த தாய் மரணங்களும் ( Maternal Death ) நிகழவில்லை  என்பது பெருமையுடன் குறிப்பிடவேண்டியது.  இறுதிக்காலத்தில் Dr மலரவனை பொறுப்பு மருத்துவராய் நியமித்திருந்தேன்.  Dr மலரவனும் ,அவர் சகி   Dr பிரியவதனாவும் இரவுபகலாய் உழைத்தார்கள். இவர்கள் இன்று எம்மோடு இல்லையென்பது பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை நினைவுவர மனதை வேதனைப்படுத்துகிறது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share