வியாழன், 8 ஜனவரி, 2015

வரலாற்றில் எழுவான் வாழ்வான் தாய்மண்ணைப்போல

அழுங்குப்பிடி கைமாறுமா?
காணாமல் போனவர்
செய்தி கிடைக்குமா?
துயிலும் இல்லங்களை 
குத்திக்கிளறியவர்
தண்டிக்கப்படுவரா?
நிலம்திண்ணிகளும்
ஒட்டுண்ணிகளும்
எம்மினமழிக்கையில்
சர்வதேசத்திற்கு   சாட்சியாகி
சலித்துபோயிற்று அற்ப வாழ்வு   
பாலகன்
பிடித்து சுடப்பட்டான்
புல்லாங்குழல்
விறகாய் எரிந்திற்று
கொலைஞன் மக்களால் தோற்று
வரலாற்றில் வீழும் நேரம்
மரணம்வரை போராடி வீழ்ந்தவன்
வரலாற்றில் எழுவான்  வாழ்வான்

தாய்மண்ணைப்போல   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share