எந்த கட்டிடங்களுக்கும் வரைபட மூலங்கள் முக்கியமானவை. இக்கட்டிடங்களில் செய்யப்படுகின்ற வேலைகளை,சரியான அளவான அமைவிடங்களும் இலகுபடுத்தும்.இறுதி போர்க்காலத்திலும் இரு சத்திர சிகிச்சை கூடங்கள் நிரந்தரமாய் அமைக்கவேண்டியிருந்தன.ஒரு சத்திர சிகிச்சைகூடத்தை ஒரு மருத்துவமனையுடன் அமைத்தோம்.அதன் வரைபட மூலத்தை நான்தான் வழங்கினேன்.எமது மருத்துவப்பிரிவால் அச்சத்திரசிகிச்சைகூடம் மக்களுக்குமாக அமைக்கப்பட்டது. அடுத்த சத்திரசிகிச்சைகூடம் இரகசியமாய் அமைக்கவேண்டியிருந்தது. முதலில் அதற்கான வரைபட மூலத்தை எமது தலைமைதான் தேர்ந்தது.அது shock of sober முறையில் மாடி வடிவில் இருந்தது.நானும் ஒரு வரைபடமூலத்தை கொடுத்திருந்தேன். அது நிலத்திற்கு கீழ் y வடிவில் வரும்.வாகனம் உள் வந்து v பாதையால் வெளியில் போகும். எனது வரைபடமூலம்தான் தலைமையால் தெரிவாகியது.எமது பகுதியில் நிரந்தரமாய் இயங்கிய பெரிய சத்திரசிகிச்சைகூடங்களின் வரைபட மூலங்களில் எனக்கும் ஒரு பங்கு இருந்தது.இந்த அனுபவம் எனக்கு பல திட்டமிடல்களில் பேருதவியாய் அமைந்தது.
வெள்ளி, 26 டிசம்பர், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக