மூத்தவன் மூன்று நேரம்
சாப்பிட்டு ,
இடைக்கிடை
கடைகளிலும் வெட்டி வருவான்
இளையவனோ களமுனையில்
காலை உணவு இரவில் வரும்
சிலவேளை புளித்தாலும்
மிச்சம் விடுவதில்லை
நாளை உணவு கிடைக்குமோ
கிடைக்காதோ
எல்லாம் எம் கையில் இல்லை
மூத்தவன் கறியில் உப்பு பார்ப்பான்
இருக்கும் உணவோடு
முட்டைப்பொரியலும் கேட்பான்
காலை மாலை என குளித்து
மடிப்பு கலையா உடுப்போடு
உந்துருளியில் வலம் வருவான்
இளையவனோ
பலநாள் போட்ட உடுப்போடு
ஈரம் ஊறி குளிர் பிடித்தாலும்
மாற்றி விட ஆள் இல்லாமல்
சென்றியில் குறிபார்த்து தவம் இருப்பான்
இளையவனுக்கு ஓய்வில்லை
படுக்க இடமில்லை
கோழித்தூக்கமே வாழ்க்கையாயிற்று
சதா
முகம் வீங்கியே இருப்பான்
மூத்தவனுக்கும்
முகம் வீங்கியே இருக்கும்
மிதமிஞ்சிய
நித்திரையால்
தாயிற்கு பிள்ளைகள்
இரு கண்கள்போல்
ஆனந்தமானாலும்
கவலையானாலும்
கண்ணீர்
இரு கண்களிலிருந்தும் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக