போராளிகளின் வாழ்க்கையில் வருகின்ற துன்ப துயர்களை காலம் கரைப்பதில்லை.அன்று அண்ணையை சந்தித்தோம்.அடுத்த நாள் ”கருணா” எதிர் நடவடிக்கையிற்கு வெளிக்கிடவேண்டும்.அண்ணையின் முகத்தில் ஈ ஆடவில்லை. எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக்கிடக்கிறது.அண்ணா சொல்கிறார் " ஒரு சத்திரசிகிச்சை அணி போதாது ,இரண்டு பக்கமும் எங்கடதான்" யார் வந்தால் நல்லாயிருக்கும்? மதிப்புக்குரிய மூத்தமருத்துவர் ஒருவரின் பெயரை நான் சொல்கிறேன்.அடுத்தநாள் புறப்படுகிறோம். மனது அந்தரப்படுகிறது. மாத்தையாவிற்கு எதிர் நடவடிக்கையிற்கு நிற்கும் போதும் இதே சஞ்சலம் இருந்தது.நல்ல காலம் காயம்வராததால் தப்பிவிட்டேன். கருணாவின் பக்கத்தில் நிற்கின்ற சத்திரசிகிச்சை அணியும் நாங்கள் பயிற்றுவித்து உருவாக்கிய அணிதான். அவர்கள் நல்லாச்செய்வார்கள் என்ற நம்பிக்கை மனதில் சிறு சந்தோசத்தைதர அந்த அணியினரின் முகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் மனதில் வந்துபோகிறது.அவர்கள் அனுப்பிய Walkman உம் Oxford English Dictionary உம் போனமாதம்தான் கிடைத்தது.அவர்கள் எங்களின் உடன்பிறவா சகோதரர்கள்.இவற்றைவிட பல தடவைகள் ஜெயசுக்குறு எதிர் நடவடிக்கையில் காயப்பட்டு எம்மால் காப்பாற்றப்பட்ட பலர் அங்கால் நிற்கிறார்கள்.பலர் செஞ்சோற்றுக்கடனுக்காக நிற்கிறார்கள்.நடவடிக்கை முடியும் வரை மனது பட்ட அவஸ்தையை எப்படி எழுதுவது? காயப்பட்டுவந்தவர்களில் எந்தப்பாகுபாடும் காட்டப்படவில்லை. மாவீரர் என்பது உயர் கௌரவம். போராட்டத்திற்கு சென்று அநியாயமாய் இறந்தவரால் எம்மனது என்றும் ஆறாதபுண்தான்.
திங்கள், 15 டிசம்பர், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக