சனி, 6 டிசம்பர், 2014

மருத்துவசேவை

வன்னியின் இறுதிப்போர்க்காலத்தில் ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இந்த படையணியின் கிளைமோர்த்தாக்குதலால் மருத்துவ ஊழியர்,பாடசாலை மாணவர்,பாதிரியார்,உதவி அரச அதிபர்,முதலுதவியாளர்,சாதாரண மக்கள் ,புலிகள் என  பலர் கொல்லப்பட்டனர்.எனவே சில பிரதேசங்கள் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தன.குறிப்பாக மன்னாரில் எமது கட்டுப்பாட்டு பிரதேசம் , நெடுங்கேணி ,ஒட்டுசுட்டான் பகுதிகளை சொல்லலாம். இந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் மருத்துவ தேவைகளை இயன்றவரை பூர்த்தி செய்வதற்கு எம்மாலானவற்றை செய்தோம்.மருத்துவ நிலையங்களுக்கு எம்மால் பயிற்றப்பட்ட மருத்துவர்களை நியமித்து நேரடியாய் மேற்பார்வை செய்து வந்தோம்.கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையை தேவையான ஊர்களுக்கு சென்று நடத்திவந்தோம்.எங்கள் உயிர்களை பணயம் வைத்து எங்கள் மக்களுக்கு சேவையை வழங்கினோம். ஒட்டுசுட்டானில் ,பெரியமடுவில் சேவை செய்த மருத்துவர்கள் இன்று எம்மோடு இல்லை.
எமது நடமாடும் மருத்துவ சேவை நீண்டகாலமாய் இயங்கிவந்தது.இச்சேவையினர் மருத்துவசேவை குறைந்த இடங்களுக்கு சென்று தங்கள் சேவையை செய்வதுடன் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு கீழ் இருந்த அனைத்து சிறுவர்,முதியோர்,வேறுபாதிப்புற்றோர் நிலையங்களுக்கு கிரம ஒழுங்கில்  சென்று மருத்துவசேவையை  வழங்கி வந்தனர். இந்த சேவை அணியினரின் மீது ஸ்ரீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணி இருதடவைகள் கிளைமோர்த்தாக்குதல் நடத்திற்று. ஆனைவிழுந்தானில் எமது ஒரு ஊழியரை நாம் இழந்தோம்.நடமாடும் சேவை  அணியினர் போரின் இறுதியில் நடமாடமுடியாமல் போனாலும் ஒரு நிலையான இடத்தில் இருந்து இறுதிவரை மக்களுக்கு சேவையை வழங்கினர்

இறுதி மூன்று வருட போர்க்காலத்தில்  மக்களுக்கான  மருத்துவ குறைநிரப்பி சேவையை இயன்றவரை வழங்க முயற்சித்தோம்.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share