ஞாயிறு, 14 டிசம்பர், 2014

போரின் இறுதிவரை

95,96 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்த போது மக்கள் தொகை வீக்கமாய் பெருத்தது.மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வது வன்னியின் மருத்துவ செயப்பாட்டு அணிக்கு பெரும் சவாலாக இருந்தது.அந்தக்காலத்தில் மக்களுக்கு கடமையாற்றிய  அனைத்து மருத்துவ சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போற்றப்படவேண்டியவர்கள்.அனைத்து மருத்துவ அடிப்படைகளும் கஷ்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்டன.


அந்த காலத்தில் அங்கு மக்களுக்கான கண் பார்வை திருத்தம்  ( Refractory  error correction  )- (Optometry ) ஒரு அணியை உருவாக்கினேன். இந்த அணிக்கூடாக மக்கள் தங்களுக்கு உரிய கண்ணாடிகளுக்கான prescription பெறக்கூடியதாய் இருந்தது. 1999 ஆம் ஆண்டு கிளி முல்லை மாவட்டங்கள் உள்ளீடாய் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு ஊடாக கண் பரிசோதனை செய்து சுமார் 2000 மாணவர்களுக்கு unicef நிறுவனத்தின் உதவியோடு கண்ணாடிகள் வழங்கினோம்.சமாதானகாலத்தில் வடகிழக்கின் ஏனைய பிரதேசத்திலும் தம்பணியை இவ்வணி சிறப்புற செய்திற்று.போரின் இறுதிவரை இவ்வணி செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share